FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, November 15, 2016

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் வாகை சூடிய திருப்பூர் மாணவர்கள்.
14.11.2016, அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) இளையோர், மிக இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. தமிழகத்திலிருந்து 70 மாணவ, மாணவியர் அடங்கிய அணி பங்கேற்றது. தமிழக அணியில், திருப்பூரைச் சேர்ந்த 35 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், தடகளம், பூப்பந்து, இறகுப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் ஆடவர், மகளிருக்குத் தனித்தனியாக நடைபெற்றன. இளையோர், மிக இளையோர் பிரிவுகளில் 190 புள்ளிகள் பெற்று தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
திருப்பூரிலிருந்து தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தனி நபர் பிரிவில் 16 தங்கம் உள்பட 24 பதக்கங்களை வென்றனர். மேலும், அணி பிரிவு போட்டிகளிலும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவர்கள் ரயில் மூலமாக திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் விளையாட்டுச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment