FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 15, 2016

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் வாகை சூடிய திருப்பூர் மாணவர்கள்.
14.11.2016, அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) இளையோர், மிக இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. தமிழகத்திலிருந்து 70 மாணவ, மாணவியர் அடங்கிய அணி பங்கேற்றது. தமிழக அணியில், திருப்பூரைச் சேர்ந்த 35 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், தடகளம், பூப்பந்து, இறகுப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் ஆடவர், மகளிருக்குத் தனித்தனியாக நடைபெற்றன. இளையோர், மிக இளையோர் பிரிவுகளில் 190 புள்ளிகள் பெற்று தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
திருப்பூரிலிருந்து தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தனி நபர் பிரிவில் 16 தங்கம் உள்பட 24 பதக்கங்களை வென்றனர். மேலும், அணி பிரிவு போட்டிகளிலும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவர்கள் ரயில் மூலமாக திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் விளையாட்டுச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment