FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, November 5, 2016

காது கேளாதோர் பள்ளியில் இரவு காவலர் பணிக்கு அழைப்பு

04.11.2016
ஈரோடு: அரசு காதுகேளாதோர் பள்ளியில், இரவு காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். செப்., 1, 2016ல், 18 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம், 4,800 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள், வரும், 10 தேதிக்குள், வயது சான்று, சாதி சான்று, ஆகியவற்றுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, தலைமையாசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment