FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, November 5, 2016

காது கேளாதோர் பள்ளியில் இரவு காவலர் பணிக்கு அழைப்பு

04.11.2016
ஈரோடு: அரசு காதுகேளாதோர் பள்ளியில், இரவு காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். செப்., 1, 2016ல், 18 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம், 4,800 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள், வரும், 10 தேதிக்குள், வயது சான்று, சாதி சான்று, ஆகியவற்றுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, தலைமையாசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment