FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, November 5, 2016

காது கேளாதோர் பள்ளியில் இரவு காவலர் பணிக்கு அழைப்பு

04.11.2016
ஈரோடு: அரசு காதுகேளாதோர் பள்ளியில், இரவு காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். செப்., 1, 2016ல், 18 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம், 4,800 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள், வரும், 10 தேதிக்குள், வயது சான்று, சாதி சான்று, ஆகியவற்றுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, தலைமையாசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment