FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, November 5, 2016

காது கேளாதோர் பள்ளியில் இரவு காவலர் பணிக்கு அழைப்பு

04.11.2016
ஈரோடு: அரசு காதுகேளாதோர் பள்ளியில், இரவு காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். செப்., 1, 2016ல், 18 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம், 4,800 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள், வரும், 10 தேதிக்குள், வயது சான்று, சாதி சான்று, ஆகியவற்றுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, தலைமையாசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment