FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, November 30, 2016

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

27.11.2016
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொதுமருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல மைய புதிய கட்டிட கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பழனிசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்விற்குப்பின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா மருததுவத்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இன்று திருச்சியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் வங்கி தொடக்க நிகழ்ச்சி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி பொருத்தும் பணி இன்று நடைபெற்றது.

அவர்கள் இன்று முதல் காது கேட்கும் திறன் பெறுவர். இந்நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள், இந்நாள்தான் அக்குழந்தைகளுக்கு காதுகேட்கும் பிறந்த நாள் ஆகும். இக்குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ. 8 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் முதன்முதலாக 18.11.2016 அன்று மூன்று குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளாண்ட் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு இன்று காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டது. காதுகேட்கும் கருவி பொருத்துவதற்கு சென்னைக்கு செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது. அலைச்சல் மற்றும் நேரத்தை சேமிப்பதற்காக இந்த வசதி திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பெற்றோார்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டியதில்லை. இச்சிகிச்சை படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு வரப்படும்.

1 வருடம் பேச்சுப்பயிற்சி

அறுவைச்சிகிச்சைக்குப் பின் 1 வருடம் பேச்சுப் பயிற்சி மற்றும் மொழிப்பயிற்சி வழங்கப்படும். இக்குழந்தைகள் ஒன்றரை வருடத்தில் மிகவும் சரளாமாக பேசத்தொடங்குவார்கள். மேலும் இரண்டாவது கட்டமாக மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 19 குழந்தைகள் கண்டறியப்பட்டன. இக்குழந்தைகளுக்கு மிகவிரைவில் அறுவைச்சிகிச்சை செய்யப்படும்.

தமிழகத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிசு மரணம், பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் தமிழகத்தில் மிக குறைவு ஆகும். அதாவது இந்தியாவில் சிசு மரணம், பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டமான 2023 இலக்கை எட்டுவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நலமையம் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 300 படுக்கைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏதுவாக பெரிய அறைகள் கொண்ட வெளிநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை செய்ய தனி அரங்கம், மூன்றாவது தளத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனி பயிற்சி அரங்கம், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இந்த பயிற்சி அரங்கில் பயிற்சி அளிக்கப்பட வசதியாக கட்டப்பட்டுள்ளது.

2,389 குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளாண்ட் சிகிச்சை
தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நலமையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 305 கோடி தொகுப்புநிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 4000க்கும் மேற்பட்ட அறுவைச்சிகிச்சையும், 2,389 குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளாண்ட் அறுவைச் சிகிச்சையும், 1,202 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும், 161 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும், 245 நோயளிகளுக்கு எலும்பு மஞ்சை அறுவைச் சிகிச்சையும், 11 நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து தாய் சேய் நலமையம் திருச்சியில் தான் கட்டப்பட்டுள்ளது. படிப்படியாக பிற மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படும். சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனைகளில் 191 குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளாண்ட் அறுவைச்சிகிச்சை மூலம் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

முழு சுகாதார இலக்கு
மேலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் பிரசவ சமயத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 2030–ம் ஆண்டிற்குள் சுகாதாரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் முதலமைச்சர் மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் இன்றே, இப்பொழுதே முழு சுகாதார இலக்கை அடைந்து விட்டோம். முதலமைச்சரின் நடவடிக்கையால் மருத்துவத் துறையில் 14,195 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இவற்றில் 7 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். மிக விரைவில் 415 சிறப்பு மருத்துவர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் மிக விரைவில் மருத்துவ தோ்வு வாரியம் மூலம் 2000ம் மருத்துவப்பணியிடங்கள் நியமனம் செய்யப்படும். ஜனவரியில் 7000 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் மருத்துவத்துறையில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை), எம்.பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), மருத்துவக்கல்லூரி முதல்வர் லில்லிமேரி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அனிதா, கண் மருத்துவத்துறைத் தலைவர் பார்த்திபன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏகநாதன், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத்தலைவர் பழனியப்பன், நிலையமருத்துவ அலுவலர் கருணாகரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா, அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்சியாபேகம், மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோ, முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment