FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, November 27, 2016

எம்.ஜி.ஆர்.சொத்துக்கள் யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

25.11.2016
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சென்னையில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன, குறிப்பாக எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, ராமவரம் தோட்டம், சத்தியா ஸ்டுடியோ, எம்ஜிஆர் , ஜானகி காதுகேளாதோர் பள்ளி உள்ளடக்கிய பல்வேறு சொத்துகளை நிர்வகிக்க MGR உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் உயிலில் சத்தியா ஸ்டுடியோவை அ.தி.மு.க கட்சிக்கு எழுதிருந்தார், காதுகேளாதோர் பள்ளியை நிர்வகிக்க ஆலந்தூர், விருகம்பாக்கம் சொத்துக்களின் வருமானங்களை பயன்படுத்த வேண்டும் என உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை ஜானகியின் உறவினர்களுக்கும் மற்றொரு பகுதியை எம்ஜிஆர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சொத்துக்களை உயர்நீதிமன்றம் தான் நிர்வகிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.ஆனால்
எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் மகன் மற்றும் ஜானகி எம்ஜிஆரின் உறவினர்களும் சொத்துக்களுக்கு நிர்வகிக்க அதிகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்ஜிஆர் இறந்த பிறகு அவரின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக உயில் எழுதியுள்ளார். அந்த உயிலில் தன் சொந்தகாரர்கள் யாரும் சொத்துக்கு உரிமை கொண்டாட உரிமை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றம் தான் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அவரது சொத்துக்களை நிர்வகித்து வந்த ராஜேந்திரன் என்பவர் மரணம் அடைந்து விட்டதால் எம்ஜிஆர் உயிலின்படி சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனை நியமனம் செய்து உத்தரவிட்டார்

No comments:

Post a Comment