FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 27, 2016

எம்.ஜி.ஆர்.சொத்துக்கள் யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

25.11.2016
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சென்னையில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன, குறிப்பாக எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, ராமவரம் தோட்டம், சத்தியா ஸ்டுடியோ, எம்ஜிஆர் , ஜானகி காதுகேளாதோர் பள்ளி உள்ளடக்கிய பல்வேறு சொத்துகளை நிர்வகிக்க MGR உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் உயிலில் சத்தியா ஸ்டுடியோவை அ.தி.மு.க கட்சிக்கு எழுதிருந்தார், காதுகேளாதோர் பள்ளியை நிர்வகிக்க ஆலந்தூர், விருகம்பாக்கம் சொத்துக்களின் வருமானங்களை பயன்படுத்த வேண்டும் என உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை ஜானகியின் உறவினர்களுக்கும் மற்றொரு பகுதியை எம்ஜிஆர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சொத்துக்களை உயர்நீதிமன்றம் தான் நிர்வகிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.ஆனால்
எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் மகன் மற்றும் ஜானகி எம்ஜிஆரின் உறவினர்களும் சொத்துக்களுக்கு நிர்வகிக்க அதிகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்ஜிஆர் இறந்த பிறகு அவரின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக உயில் எழுதியுள்ளார். அந்த உயிலில் தன் சொந்தகாரர்கள் யாரும் சொத்துக்கு உரிமை கொண்டாட உரிமை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றம் தான் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அவரது சொத்துக்களை நிர்வகித்து வந்த ராஜேந்திரன் என்பவர் மரணம் அடைந்து விட்டதால் எம்ஜிஆர் உயிலின்படி சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனை நியமனம் செய்து உத்தரவிட்டார்

No comments:

Post a Comment