FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 28, 2016

காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த காமுகன் கைது

28.11.2016, சங்ககிரி: சங்ககிரி அருகே, மாற்றுத்திறனாளி பெண்ணை, பலாத்காரம் செய்த, தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர். சங்ககிரி அருகே, கத்தேரி, கள்ளிப்பாளையம், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். அவரது மகள் இந்துரேகா, 26. காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து, தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில், இந்து ரேகா புகார் செய்தார். அதில், அதே பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார், 23, என்பவர், கடந்த, 22ல், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். விசாரித்த போலீசார், மோகன்குமாரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment