FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, November 11, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து

09.11.2016, திண்டுக்கல்,

ஐ.நா.சபையில், கடந்த 2007–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உரிமைகள் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் மத்திய அரசு தயாரித்த புதிய சட்டநகல், 2012–ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மேலவையில் இச்சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவும் சட்டநகலின் மீதான தனது ஆலோசனைகளை கடந்த ஆண்டு மே மாதமே அளித்துவிட்டது. அதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

எனவே புதிய உரிமைகள் சட்டத்தை இனியும் காலதாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்றித்தர, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment