FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 11, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து

09.11.2016, திண்டுக்கல்,

ஐ.நா.சபையில், கடந்த 2007–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உரிமைகள் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் மத்திய அரசு தயாரித்த புதிய சட்டநகல், 2012–ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மேலவையில் இச்சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவும் சட்டநகலின் மீதான தனது ஆலோசனைகளை கடந்த ஆண்டு மே மாதமே அளித்துவிட்டது. அதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

எனவே புதிய உரிமைகள் சட்டத்தை இனியும் காலதாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்றித்தர, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment