FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 11, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து

09.11.2016, திண்டுக்கல்,

ஐ.நா.சபையில், கடந்த 2007–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உரிமைகள் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் மத்திய அரசு தயாரித்த புதிய சட்டநகல், 2012–ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மேலவையில் இச்சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவும் சட்டநகலின் மீதான தனது ஆலோசனைகளை கடந்த ஆண்டு மே மாதமே அளித்துவிட்டது. அதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

எனவே புதிய உரிமைகள் சட்டத்தை இனியும் காலதாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்றித்தர, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment