FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 11, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து

09.11.2016, திண்டுக்கல்,

ஐ.நா.சபையில், கடந்த 2007–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உரிமைகள் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் மத்திய அரசு தயாரித்த புதிய சட்டநகல், 2012–ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2014 பிப்ரவரியில் பாராளுமன்ற மேலவையில் இச்சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவும் சட்டநகலின் மீதான தனது ஆலோசனைகளை கடந்த ஆண்டு மே மாதமே அளித்துவிட்டது. அதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

எனவே புதிய உரிமைகள் சட்டத்தை இனியும் காலதாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்றித்தர, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment