FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, November 20, 2016

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் துணைவேந்தர் திறந்து வைத்தார்

20.11.2016
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி, கணினி மூலம் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தையல் பயிற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரம் கையாளுதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் பேசுகையில், "சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காகவே பல்வேறு புதிய பயிற்சி வகுப்புகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பி.சி.ஏ. பட்டதாரி படிப்பு நமது பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கியுள்ளது" என்றார். விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகள் மைய தலைவர் (பொறுப்பு) பிரபாவதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment