FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 20, 2016

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் துணைவேந்தர் திறந்து வைத்தார்

20.11.2016
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி, கணினி மூலம் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தையல் பயிற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரம் கையாளுதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் பேசுகையில், "சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காகவே பல்வேறு புதிய பயிற்சி வகுப்புகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பி.சி.ஏ. பட்டதாரி படிப்பு நமது பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கியுள்ளது" என்றார். விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகள் மைய தலைவர் (பொறுப்பு) பிரபாவதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment