FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, November 11, 2016

காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் விரைவாக வழங்க உத்தரவு

09.11.2016
சேலம்: காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை, துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனர் பிரியங்பாரதி, மாநில அரசுகளின் போக்குவரத்து செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாகனம் ஓட்ட, பார்வை செயல்பாடே முக்கியம். காது கேட்கும் திறன், சிறிதளவே சம்பந்தப்பட்டதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், வாய் பேசாத, காது கேளாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. காதுகேட்கும் கருவி அல்லது காக்ளியர் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேட்கும் திறனை, மேம்படுத்திக்கொள்ள முடியும். கேட்கும் திறனை இழந்தவர்கள், ஓட்டும் திறமையை இழக்க முடியாது என்பதை, கண்டிப்பாக ஏற்க வேண்டும். வேண்டுமானால், கேட்கும் திறன் இல்லாதவர் என்பதை, குறியீட்டின் மூலம் தெரியும்படி, வாகனத்தில் குறிப்பிடலாம். ஓட்டுனர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் விதிகளை, காது கேட்காதவர்களின் விண்ணப்பங்களில், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை, போக்குவரத்து சட்டம், 1988 பிரிவு 8(4)ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலர் நம்புராஜன் கூறுகையில், ''மத்திய அரசின், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தி, காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு, தாமதப்படுத்தாமல் ஓட்டுனர் உரிமம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment