FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 11, 2016

காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் விரைவாக வழங்க உத்தரவு

09.11.2016
சேலம்: காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை, துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனர் பிரியங்பாரதி, மாநில அரசுகளின் போக்குவரத்து செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாகனம் ஓட்ட, பார்வை செயல்பாடே முக்கியம். காது கேட்கும் திறன், சிறிதளவே சம்பந்தப்பட்டதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், வாய் பேசாத, காது கேளாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. காதுகேட்கும் கருவி அல்லது காக்ளியர் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேட்கும் திறனை, மேம்படுத்திக்கொள்ள முடியும். கேட்கும் திறனை இழந்தவர்கள், ஓட்டும் திறமையை இழக்க முடியாது என்பதை, கண்டிப்பாக ஏற்க வேண்டும். வேண்டுமானால், கேட்கும் திறன் இல்லாதவர் என்பதை, குறியீட்டின் மூலம் தெரியும்படி, வாகனத்தில் குறிப்பிடலாம். ஓட்டுனர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் விதிகளை, காது கேட்காதவர்களின் விண்ணப்பங்களில், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை, போக்குவரத்து சட்டம், 1988 பிரிவு 8(4)ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலர் நம்புராஜன் கூறுகையில், ''மத்திய அரசின், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தி, காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு, தாமதப்படுத்தாமல் ஓட்டுனர் உரிமம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment