FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, November 11, 2016

காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் விரைவாக வழங்க உத்தரவு

09.11.2016
சேலம்: காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை, துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனர் பிரியங்பாரதி, மாநில அரசுகளின் போக்குவரத்து செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாகனம் ஓட்ட, பார்வை செயல்பாடே முக்கியம். காது கேட்கும் திறன், சிறிதளவே சம்பந்தப்பட்டதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், வாய் பேசாத, காது கேளாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. காதுகேட்கும் கருவி அல்லது காக்ளியர் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேட்கும் திறனை, மேம்படுத்திக்கொள்ள முடியும். கேட்கும் திறனை இழந்தவர்கள், ஓட்டும் திறமையை இழக்க முடியாது என்பதை, கண்டிப்பாக ஏற்க வேண்டும். வேண்டுமானால், கேட்கும் திறன் இல்லாதவர் என்பதை, குறியீட்டின் மூலம் தெரியும்படி, வாகனத்தில் குறிப்பிடலாம். ஓட்டுனர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் விதிகளை, காது கேட்காதவர்களின் விண்ணப்பங்களில், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை, போக்குவரத்து சட்டம், 1988 பிரிவு 8(4)ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலர் நம்புராஜன் கூறுகையில், ''மத்திய அரசின், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தி, காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு, தாமதப்படுத்தாமல் ஓட்டுனர் உரிமம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment