FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 11, 2016

காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் விரைவாக வழங்க உத்தரவு

09.11.2016
சேலம்: காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை, துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனர் பிரியங்பாரதி, மாநில அரசுகளின் போக்குவரத்து செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாகனம் ஓட்ட, பார்வை செயல்பாடே முக்கியம். காது கேட்கும் திறன், சிறிதளவே சம்பந்தப்பட்டதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், வாய் பேசாத, காது கேளாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. காதுகேட்கும் கருவி அல்லது காக்ளியர் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேட்கும் திறனை, மேம்படுத்திக்கொள்ள முடியும். கேட்கும் திறனை இழந்தவர்கள், ஓட்டும் திறமையை இழக்க முடியாது என்பதை, கண்டிப்பாக ஏற்க வேண்டும். வேண்டுமானால், கேட்கும் திறன் இல்லாதவர் என்பதை, குறியீட்டின் மூலம் தெரியும்படி, வாகனத்தில் குறிப்பிடலாம். ஓட்டுனர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் விதிகளை, காது கேட்காதவர்களின் விண்ணப்பங்களில், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை, போக்குவரத்து சட்டம், 1988 பிரிவு 8(4)ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலர் நம்புராஜன் கூறுகையில், ''மத்திய அரசின், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தி, காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு, தாமதப்படுத்தாமல் ஓட்டுனர் உரிமம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment