FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 28, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

26.11.2016
ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு வரும், டிச., 2ல் நடக்க உள்ளது. வயது, 18 முதல், 45 வரை உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், பதிவு பெற்ற நிறுவனத்திடம் இருந்து, குறைந்தது ஆறு மாத காலம் வரை தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன், டிச., 2, காலை, 9:00 மணிக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment