FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, November 20, 2016

காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நவீன கருவிகள் பொருத்தப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

19.11.2016, திருச்சி,
பிறவியிலேயே காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காதில் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகளை பொருத்தி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

முதன் முறையாக...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மணப்பாறை, தொட்டியம் காடுவெட்டி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, பிறவியிலேயே காதுகேட்காத 3 ஏழைக்குழந்தைகளுக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, அக்குழந்தைகளுக்கு காதுகேட்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி தலைமையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அறுவை சிகிச்சை குறித்து சென்னை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அதிகமான குழந்தைகள் பிறவியிலேயே காது கேட்காமல் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதே ஆகும். இதனால் அந்த தம்பதியினருக்கு காது கேட்காத குழந்தை பிறக்கின்றது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காது கேட்க வைப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற கருவிகள் வாங்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நேற்று பிறவியிலேயே காது கேட்காத மணப்பாறையை சேர்ந்த 3 வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி புவனேஷ்வரி மற்றும் மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம், நானும் (டாக்டர் மோகன்காமேஸ்வரன்) மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் குழுவினர் “காக்லியர் இம்பிலான்ட்“ கருவிகளை வெற்றிகரமாக பொருத்தினோம். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக திருச்சி கலெக்டர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத குழந்தைகள் “காக்லியர் இம்பிலான்ட்“ அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்“, என்றார்.

அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி, டாக்டர் பழனியப்பன் உள்பட டாக்டர்கள், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்சியாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment