FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 20, 2016

காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நவீன கருவிகள் பொருத்தப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

19.11.2016, திருச்சி,
பிறவியிலேயே காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காதில் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகளை பொருத்தி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

முதன் முறையாக...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மணப்பாறை, தொட்டியம் காடுவெட்டி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, பிறவியிலேயே காதுகேட்காத 3 ஏழைக்குழந்தைகளுக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, அக்குழந்தைகளுக்கு காதுகேட்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி தலைமையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அறுவை சிகிச்சை குறித்து சென்னை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அதிகமான குழந்தைகள் பிறவியிலேயே காது கேட்காமல் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதே ஆகும். இதனால் அந்த தம்பதியினருக்கு காது கேட்காத குழந்தை பிறக்கின்றது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காது கேட்க வைப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற கருவிகள் வாங்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நேற்று பிறவியிலேயே காது கேட்காத மணப்பாறையை சேர்ந்த 3 வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி புவனேஷ்வரி மற்றும் மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம், நானும் (டாக்டர் மோகன்காமேஸ்வரன்) மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் குழுவினர் “காக்லியர் இம்பிலான்ட்“ கருவிகளை வெற்றிகரமாக பொருத்தினோம். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக திருச்சி கலெக்டர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத குழந்தைகள் “காக்லியர் இம்பிலான்ட்“ அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்“, என்றார்.

அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி, டாக்டர் பழனியப்பன் உள்பட டாக்டர்கள், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்சியாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment