FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 20, 2016

காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நவீன கருவிகள் பொருத்தப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

19.11.2016, திருச்சி,
பிறவியிலேயே காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காதில் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகளை பொருத்தி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

முதன் முறையாக...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மணப்பாறை, தொட்டியம் காடுவெட்டி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, பிறவியிலேயே காதுகேட்காத 3 ஏழைக்குழந்தைகளுக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, அக்குழந்தைகளுக்கு காதுகேட்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி தலைமையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அறுவை சிகிச்சை குறித்து சென்னை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அதிகமான குழந்தைகள் பிறவியிலேயே காது கேட்காமல் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதே ஆகும். இதனால் அந்த தம்பதியினருக்கு காது கேட்காத குழந்தை பிறக்கின்றது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காது கேட்க வைப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற கருவிகள் வாங்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நேற்று பிறவியிலேயே காது கேட்காத மணப்பாறையை சேர்ந்த 3 வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி புவனேஷ்வரி மற்றும் மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம், நானும் (டாக்டர் மோகன்காமேஸ்வரன்) மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் குழுவினர் “காக்லியர் இம்பிலான்ட்“ கருவிகளை வெற்றிகரமாக பொருத்தினோம். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக திருச்சி கலெக்டர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத குழந்தைகள் “காக்லியர் இம்பிலான்ட்“ அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்“, என்றார்.

அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி, டாக்டர் பழனியப்பன் உள்பட டாக்டர்கள், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்சியாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment