FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, November 20, 2016

காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நவீன கருவிகள் பொருத்தப்பட்டது திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

19.11.2016, திருச்சி,
பிறவியிலேயே காது கேட்காத 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காதில் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகளை பொருத்தி, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

முதன் முறையாக...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மணப்பாறை, தொட்டியம் காடுவெட்டி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, பிறவியிலேயே காதுகேட்காத 3 ஏழைக்குழந்தைகளுக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம் “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டு, அக்குழந்தைகளுக்கு காதுகேட்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி தலைமையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அறுவை சிகிச்சை குறித்து சென்னை காது, மூக்கு, தொண்டை பிரிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அதிகமான குழந்தைகள் பிறவியிலேயே காது கேட்காமல் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதே ஆகும். இதனால் அந்த தம்பதியினருக்கு காது கேட்காத குழந்தை பிறக்கின்றது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காது கேட்க வைப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து “காக்லியர் இம்பிலான்ட்“ என்ற கருவிகள் வாங்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நேற்று பிறவியிலேயே காது கேட்காத மணப்பாறையை சேர்ந்த 3 வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி புவனேஷ்வரி மற்றும் மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு காதில் அறுவை சிகிச்சை மூலம், நானும் (டாக்டர் மோகன்காமேஸ்வரன்) மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி தலைமையில், அரசு மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் குழுவினர் “காக்லியர் இம்பிலான்ட்“ கருவிகளை வெற்றிகரமாக பொருத்தினோம். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக திருச்சி கலெக்டர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத குழந்தைகள் “காக்லியர் இம்பிலான்ட்“ அறுவை சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்“, என்றார்.

அப்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மேரிலில்லி, டாக்டர் பழனியப்பன் உள்பட டாக்டர்கள், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்சியாபேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment