FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 2-ந் தேதி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம்

18.11.2016
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்டக்கிளை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை உடனே பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த சட்ட நகல் என்ன நிலைமையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே 4 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட நகலின் நிலைமை என்ன என்பதை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதை வலியுறுத்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கங்கள் சமீபத்தில் டெல்லியில் கூடி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

No comments:

Post a Comment