FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 2-ந் தேதி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம்

18.11.2016
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்டக்கிளை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை உடனே பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த சட்ட நகல் என்ன நிலைமையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே 4 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட நகலின் நிலைமை என்ன என்பதை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதை வலியுறுத்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கங்கள் சமீபத்தில் டெல்லியில் கூடி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

No comments:

Post a Comment