FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 2-ந் தேதி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம்

18.11.2016
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்டக்கிளை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை உடனே பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த சட்ட நகல் என்ன நிலைமையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே 4 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட நகலின் நிலைமை என்ன என்பதை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதை வலியுறுத்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கங்கள் சமீபத்தில் டெல்லியில் கூடி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

No comments:

Post a Comment