FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 2-ந் தேதி நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம்

18.11.2016
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்டக்கிளை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசும்போது கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை உடனே பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த சட்ட நகல் என்ன நிலைமையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே 4 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட நகலின் நிலைமை என்ன என்பதை நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதை வலியுறுத்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சங்கங்கள் சமீபத்தில் டெல்லியில் கூடி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்புராஜன் கூறினார்.

No comments:

Post a Comment