FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 28, 2016

"மாற்றுத்திறனாளி மீது அன்பு செலுத்துங்க'

27.11.2016, திருப்பூர்: "மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ளம் வேண்டும்,' என, பேராசிரியர் கிறிஸ்டோபர் காஞ்சனா பேசினார்.திருப்பூர் மாவட்ட, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலை கல்வித்திட்டம் குறித்த ஒரு நாள் முனைப்பு பயிற்சி கருத்தரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் ÷மல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார்;கோவை சங்கரா அறிவியல் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர், காஞ்சனா பேசுகையில், ""மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களை பேச, கேட்க சொல்லி பெற்றோர் வற்புறுத்துவதால், ஒரு கட்டத்தில், அவர்கள் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ள வேண்டும்,'' என்றார்.பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம்; நோய் வராமல் தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment