FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 28, 2016

"மாற்றுத்திறனாளி மீது அன்பு செலுத்துங்க'

27.11.2016, திருப்பூர்: "மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ளம் வேண்டும்,' என, பேராசிரியர் கிறிஸ்டோபர் காஞ்சனா பேசினார்.திருப்பூர் மாவட்ட, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலை கல்வித்திட்டம் குறித்த ஒரு நாள் முனைப்பு பயிற்சி கருத்தரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் ÷மல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார்;கோவை சங்கரா அறிவியல் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர், காஞ்சனா பேசுகையில், ""மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களை பேச, கேட்க சொல்லி பெற்றோர் வற்புறுத்துவதால், ஒரு கட்டத்தில், அவர்கள் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ள வேண்டும்,'' என்றார்.பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம்; நோய் வராமல் தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment