FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 28, 2016

"மாற்றுத்திறனாளி மீது அன்பு செலுத்துங்க'

27.11.2016, திருப்பூர்: "மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ளம் வேண்டும்,' என, பேராசிரியர் கிறிஸ்டோபர் காஞ்சனா பேசினார்.திருப்பூர் மாவட்ட, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலை கல்வித்திட்டம் குறித்த ஒரு நாள் முனைப்பு பயிற்சி கருத்தரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் ÷மல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார்;கோவை சங்கரா அறிவியல் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர், காஞ்சனா பேசுகையில், ""மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களை பேச, கேட்க சொல்லி பெற்றோர் வற்புறுத்துவதால், ஒரு கட்டத்தில், அவர்கள் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ள வேண்டும்,'' என்றார்.பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம்; நோய் வராமல் தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment