FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, November 28, 2016

"மாற்றுத்திறனாளி மீது அன்பு செலுத்துங்க'

27.11.2016, திருப்பூர்: "மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ளம் வேண்டும்,' என, பேராசிரியர் கிறிஸ்டோபர் காஞ்சனா பேசினார்.திருப்பூர் மாவட்ட, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலை கல்வித்திட்டம் குறித்த ஒரு நாள் முனைப்பு பயிற்சி கருத்தரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் ÷மல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார்;கோவை சங்கரா அறிவியல் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர், காஞ்சனா பேசுகையில், ""மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களை பேச, கேட்க சொல்லி பெற்றோர் வற்புறுத்துவதால், ஒரு கட்டத்தில், அவர்கள் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் மீது கருணை செலுத்த நல்ல உள்ள வேண்டும்,'' என்றார்.பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம்; நோய் வராமல் தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment