FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 11, 2016

கள்ளக் காதலால் விபரீதம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

08.11.2016, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்ற தாய், கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே எல்லையூரைச் சேர்ந்தவர் நாகப்பா, கவுரம்மா தம்பதியரின் மகள் வெங்கடலட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தாய்மாமன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள் மகள் மஞ்சு(15), மகன் (முத்தப்பா(13). இந்த இரண்டு குழுந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கடலட்சுமி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் (34) என்பவருடன் வெங்கடலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களை பெங்களூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க சுரேஷும், வெங்கடலட்சுமியும் முடிவு செய்தனர். 6 மாதத்துக்கு முன், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெங்களூருக்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தனர். இதனிடையே வெங்கடலட்சுமியின் பெற்றோர், தங்களுடைய சொத்துக்களை மகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு என 3 பங்காக பிரித்து உயில் எழுதியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடலட்சுமி கள்ளக்காதனுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி குழுந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக, பெங்களூர் காப்பகத்தில் இருந்து குழந்தைகளை எல்லையூருக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் என்பவர் குழந்தைகளை கொன்றாத ஒப்புக்கொண்டார். மேலும் சுரேஷ், தாய் வெங்கடலட்சுமி, சுரேஷின் தம்பி கோபால் (24), கோபாலின் மனைவி சாந்தி (23) ஆகிய 4 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்பின் 5 பேரையும் நேற்றிரவு மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment