FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 11, 2016

கள்ளக் காதலால் விபரீதம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

08.11.2016, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்ற தாய், கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே எல்லையூரைச் சேர்ந்தவர் நாகப்பா, கவுரம்மா தம்பதியரின் மகள் வெங்கடலட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தாய்மாமன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள் மகள் மஞ்சு(15), மகன் (முத்தப்பா(13). இந்த இரண்டு குழுந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கடலட்சுமி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் (34) என்பவருடன் வெங்கடலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களை பெங்களூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க சுரேஷும், வெங்கடலட்சுமியும் முடிவு செய்தனர். 6 மாதத்துக்கு முன், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெங்களூருக்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தனர். இதனிடையே வெங்கடலட்சுமியின் பெற்றோர், தங்களுடைய சொத்துக்களை மகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு என 3 பங்காக பிரித்து உயில் எழுதியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடலட்சுமி கள்ளக்காதனுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி குழுந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக, பெங்களூர் காப்பகத்தில் இருந்து குழந்தைகளை எல்லையூருக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் என்பவர் குழந்தைகளை கொன்றாத ஒப்புக்கொண்டார். மேலும் சுரேஷ், தாய் வெங்கடலட்சுமி, சுரேஷின் தம்பி கோபால் (24), கோபாலின் மனைவி சாந்தி (23) ஆகிய 4 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்பின் 5 பேரையும் நேற்றிரவு மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment