FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 11, 2016

கள்ளக் காதலால் விபரீதம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது

08.11.2016, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்ற தாய், கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே எல்லையூரைச் சேர்ந்தவர் நாகப்பா, கவுரம்மா தம்பதியரின் மகள் வெங்கடலட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தாய்மாமன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள் மகள் மஞ்சு(15), மகன் (முத்தப்பா(13). இந்த இரண்டு குழுந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கடலட்சுமி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் (34) என்பவருடன் வெங்கடலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களை பெங்களூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க சுரேஷும், வெங்கடலட்சுமியும் முடிவு செய்தனர். 6 மாதத்துக்கு முன், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெங்களூருக்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தனர். இதனிடையே வெங்கடலட்சுமியின் பெற்றோர், தங்களுடைய சொத்துக்களை மகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு என 3 பங்காக பிரித்து உயில் எழுதியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடலட்சுமி கள்ளக்காதனுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி குழுந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக, பெங்களூர் காப்பகத்தில் இருந்து குழந்தைகளை எல்லையூருக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் என்பவர் குழந்தைகளை கொன்றாத ஒப்புக்கொண்டார். மேலும் சுரேஷ், தாய் வெங்கடலட்சுமி, சுரேஷின் தம்பி கோபால் (24), கோபாலின் மனைவி சாந்தி (23) ஆகிய 4 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்பின் 5 பேரையும் நேற்றிரவு மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment