FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 29, 2020

Fast track courts, stricter law key to curb sexual violence against differently-abled children: Activists

28.09.2020
While the Haryana government launched modules on the JJ Act and POCSO in sing language, this module should be emulated across India, activists feel.

NEW DELHI: The Centre and state governments should work in tandem to raise awareness of sexual offences committed against differently-abled children and the child protection laws, said activists.

While the Haryana government launched modules on the Juvenile Justice (JJ) Act and Protection of Children from Sexual Offences (POCSO) in Indian sign language, this model should be emulated across India.

In August, a 10-year-old girl who was her hearing-impaired was raped and murdered in Palwal. The legal machinery also needs immediate reforms to be able to pay attention to the rape of differently-abled minors, activists feel.

“The legal system in India is in dire need of awareness when it comes to resolving grave issues like sexually abused and raped children with disabilities. The overall response mechanism suffers from many setbacks. A strict, fast-track course of legal action against the perpetrators could curb such incidents in future. Awareness campaigns should be launched across India,” said activist Saudamini Pethe.

“This is because of the lack of access to information among the differently-abled community. Stricter laws and increased awareness about disabled people’s equality among the society is the need of the hour,” Alim Chandani, founder of Access Mantra Foundation added.

Recently, the Deaf and Dumb Welfare Association of Palwal submitted a letter demanding immediate relief to the family of the little girl as her immediate family members were also persons with disability in relation to the Palwal rape case.

The association has also demanded an investigation of the case in a time-bound manner to ensure that justice is not denied.

General secretary of National Platform for the Rights of the Disabled (NPRD), Muralidharan said: “Women and girls with disabilities are oftens more vulnerable to sexual attacks and violence. However, society and the media, tend to pay very less attention when the violence is directed against them.”


தூய்மை பணியில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள்

28.09.2020
திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.


நான்காவது திருமணம் செய்துகொள்ள ஆசை… அதற்கு குறுக்காக நின்ற காது கேளாத வாய் பேச முடியாத மகன் –பெற்ற தாயின் கொடூர செயல்!

27.09.2020
பீகார் மாநிலத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை சேர்ந்தவர் தர்மஷீலா தேவி. இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அருண் சவுத்ரி என்பவரோடு திரும
ணம் நடந்தது. அவர்களுக்கு சாஜன் குமார் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த தேவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முகேஷ் சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள அவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் நினைக்கையில் அவரின் குழந்தை அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்.
சிறுவன் காணாமல் போனது குறித்து கிராமத்தாருக்கு சந்தேகம் வர போலிஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தர்மஷீலா மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Monday, September 28, 2020

சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் பணிக்கு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

27.09.2020
திருப்பூா்: சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எம்.ஜி.ஆா்.சத்துணவு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 சத்துணவு அமைப்பாளா், 14 சமையல் உதவியாளா் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் தகுதியான பெண்கள் நியமிக்கப்படவுள்ளனா். சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்களாகவும் 18 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், மாற்றுத் திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கு 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருப்பதுடன், 21 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும் , விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதில், நியமன பணியிடத்தில் இருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


13 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன் - 16 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கைது

26.09.2020
விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பெற்றோர் கட்டட வேலைக்கு செல்லவே, வீட்டில் தன் தம்பி, தங்கையோடு இருந்துள்ளார் அந்த சிறுமி. தம்பியும் தங்கையும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான அந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், சிறுமி சத்தம் போடவே, மாணவியின் வாயை துணியால் பொத்தி அவரிடம் மீண்டும் அத்துமீற முயன்றுள்ளார். ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி எதிர்க்கவே, ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் மாற்றுத்திறனாளியான சிறுவன், சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்ததாகவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சிறுவன், சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுவனின் தொல்லை குறித்து சிறுமி தன்பெற்றோரிடம் கூறவே, அவர்களும் சிறுவனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், இந்த கொடூர செயலை செய்துள்ளார். தன்னுடைய காதலை சிறுமி ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதோடு அவரை கொடூரமாகவும் கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Sunday, September 27, 2020

ஆவின் பால்பொருள் விற்பனை மையம்: மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு


26.09.2020
திருச்சி, செப். 25: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால்பொருள் விற்பனை மையம் தொடங்கிப் பயன்பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு ஆவின் முகவா்களாகும் வாய்ப்புள்ளது.

தோ்வு செய்யப்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன் வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருள் கொள்முதல் நிதியாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆவின் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆவின் உற்பத்தி பொருள்களை விற்க வசதியாக வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 1 வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் காா்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590.

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவி


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் கண்டறியும் கருவி மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, செவித்திறன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியது:

இந்தக் கருவியால் குழந்தைகளின் காது கேளாமை குறைபாட்டை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி அல்லது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உட்செவிச்சுருள் பதியும் அறுவை சிகிச்சை முற்றிலும் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவா்களின் காது கேட்கும் திறனும், வாய் பேசும் திறன் காப்பாற்றப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை பெறாத குழந்தைகளின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இவா்களுக்கு சிறுவயதிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனைக்காக இதுவரையிலும் வெளியூா் செல்லும் நிலை இருந்தது. இனிமேல், டெல்டா பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் ஆா். கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் எஸ். அப்துல் ஹமீது அன்சாரி, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.




காதுக்கு எட்டியது! காது கேளாதோரின் கோரிக்கை:கிடைத்தன மாற்றுக்கருவிகள்

25.09.2020
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனையில், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை 218 குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், செவித்திறனுக்காக பொருத்தப்பட்டுள்ள கருவி பழுதடைந்த, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 32 குழந்தைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில், மாற்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் கூறியதாவது:ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மதிப்புடைய இக்கருவியை, அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது.இதனால், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுக்கருவிகள் வழங்குவதற்கும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.


சிறுமியை கத்தரிக்கோலால் அறுத்து கொலை செய்த வாய் பேச முடியாத சிறுவன்!!


26.09.2020
விழுப்புரம் : பள்ளி மாணவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். இவருடைய தந்தை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

தாய், நூறுநாள் வேலைக்கு சென்றிருந்தார். மாணவியின் தம்பியும், தங்கையும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத சென்னையில் உள்ள காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் சீனுவாசான் என்ற 16 வயதுடைய சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தான்.

பின்னர் அந்த சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அதற்கு மாணவி கூச்சல் போட்டாள். ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் மாணவியின் வயிறு, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினான். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட மாணவி அதே இடத்திலேயே உயிரிழந்தாள்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அப்போது அந்த சிறுவன் ரத்தக்கறை படிந்த கத்திரிக்கோலுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். பொதுமக்களை பார்த்ததும், சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும், இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள், அந்த சிறுவனை கண்டித்ததோடு அவனது பெற்றோரிடமும் இதுபற்றி கூறி எச்சரிக்கை செய்தனர்.

இந்த சூழலில் மாணவி மட்டும் அவளது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சிறுவன், அத்துமீறி அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே மாணவி கூச்சல் போடவே ஆத்திரமடைந்து கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



Friday, September 25, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி: கலெக்டர்



மதுரை : ''மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும்,'' என, மதுரையில் ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் திறன் பயிற்சி திட்டங்களை ஆன்லைன் மூலம் துவக்கி கலெக்டர் வினய் தெரிவித்தார்.
நிறுவனம் சார்பில் கள்ளந்திரியில் பால்பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, ஊமச்சிகுளத்தில் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. கலெக்டர் பேசுகையில், ''பயிற்சி திட்டங்கள் பயனாளிகளின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.18 முதல் 45 வயதிற்குட்பட்ட யாரும் இந்நிறுவனத்தில் பயிற்சியில் சேரலாம். உணவுடன் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். மதுரையில் 33 ஆண்டுகளில் இந்நிறுவனம் 24,204 பேருக்கு பயிற்சியளித்துள்ளது.


சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


25.09.2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்படும்.

அதனடிப்படையில், அமைப்பாளா் பணிக்கான தகுதிகள்: பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) சம்பந்தப்பட்டோரின் கல்வித் தகுதியானது, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி என இருந்தால் போதுமானது.

வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் பிரிவினருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

பிற தகுதிகளாக நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்பும் 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கான தகுதிகள்: சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அவா்கள் விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) கல்வித் தகுதியாக பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவராக இருந்தால் போதுமானது.

பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். விண்ணப்பதாரருக்கான வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டா் சுற்றளவு இருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு 24.9.2020 முதல் 30.9.2020 வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி ஆணையா் அலுவலகங்களுக்கு மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல் இணைக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா் அதற்கான சான்று நகல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் அதற்கான சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். நோ்முகத் தோ்வின்போது அசல் சான்றிதழ்கள் அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


NEP for standarisation of Indian Sign Language; stakeholders say more needs to be done


While NEP seeks to mainstream Indian Sign Language (ISL), the community demands more content, mainstreaming of sign language beyond the community, bilingual education for hearing and speech impaired.

Academicians and the community of people associated with the education of hearing and speech impaired have expressed skepticism over standardisation of the Indian Sign Language (ISL), a move advocated in the National Education Policy (NEP) 2020.

“Having different sign languages is not a problem for speech or hearing impaired people. I am sure the deaf community is proud of the diversity of the sign language. The real issues are different. We do not have proper research on the variation and diversity of ISL in India to standardise it. Nor a data corpus to understand it. Empowering a language user community does not require a common sign language,” AS Narayanan, a hearing-impaired himself and president of the National Association of the Deaf (NAD), told indianexpress.com through a written conversation. Narayanan was closely associated with developing the ISL dictionary.

The NEP, released earlier this year, had said, “Indian Sign Language will be standardised across the country, and national and state curriculum materials developed, for use by students with hearing impairment. Local sign languages will be respected and taught as well, where possible and relevant. NIOS will develop high-quality modules to teach Indian Sign Language, and to teach other basic subjects using Indian Sign Language.”

Narayanan, however, said the pressing need is not to standardise the different signs used by members, but lack of quality education content available in that language. “The need for educational materials in local or national sign language produced by the best available signers which match quality standards, both technically and content-wise, is the primary need. Secondly, training programs for deaf people to become professionals in the area of their respective education. Hearing-impaired professionals are the key to resolving deaf education,” he said.

He believes that a separate committee of experts needs to be set-up to have an education standard for hearing and speech impaired students. The NAD had also written letters to the Ministry of Education demanding to set up an expert committee to develop a national curriculum framework in Indian Sign language. “We are waiting for a response from the ministry very soon,” said Narayanan.



To sign or not to sign: Dilemma within academia


The development of educational content in sign language is lacking because the academicians are divided over teaching through sign languages to students. Many also believe that since sign language is not accepted in mainstream society, learning it can make a student secluded instead.

“Sign Language in India has been looked through myths and challenges, so far dividing educationists and society into two schools of thought – one’s who support the idea of sign language and those who support oral-aural methods of learning. Later is followed largely due to the lack of availability of content and training to teachers in sign language,” said Gaurav Raheja, professor at Department of Architecture and Planning, IIT-Roorkee, who has participated in several initiatives of the government, including the accessible India campaign. He was also a member of the team behind drafting the accessibility guidelines for Indian Railways.

He believes that standardisation of ISL also needs customisation of education content and teacher training in ISL. He also suggests teaching ISL to ‘mainstream’ society to popularise the language.

“We look forward to an Indian of the future when ‘common people’ would also learn this language and allow better integration of deaf in our mainstream society… The major barrier to such steps is the awareness and support of society at large,” said Raheja.

The road ahead

Raji Gopal, who heads the undergraduate programs at the National Institute of Speech and Hearing (NISH), Thiruvananthapuram, Kerala believes NEP’s mention of sign language will bring the much-needed focus to the issue.

“The more you use the signs for communication, for education and in other areas, the more familiar it becomes. However, it is a huge challenge spreading this in a country which is estimated to have roughly 18 million deaf people. Accessibility is one of the biggest challenges for them. Not many of the 18 million are even aware of the RPWD Act 2016 or NEP 2020. The non- standardised version will continue to be used by deaf communities unless the standardised form of sign language is made accessible,” she said.

Gopal says there should be awareness around the topic and ISL should be introduced as a second or even third language in the curriculum. “Enforcing the RPWD Act by which media channels will have sign language interpreters for all their programs, all meetings and programs conducted will have interpreters, including sign language as a subject in the special teacher training programs, starting bilingual programs for the deaf from early intervention to higher education are some of the solutions,” she said.


Diversity in Sign Languages Not a Problem, Educationists Working With Hearing-Speech Impaired Children Oppose Standardisation Move in NEP 2020


Educationists and groups working on the education of the hearing and speech impaired students oppose the standardisation of Indian Sign Language(ISL)prescribed in the NEP 2020.

The National Education Policy(NEP 2020) has been a topic for discussion ever seen it was brought to the limelight and many aspects of it have been discussed, debated and explained.

But now we are seeing how the National Education Policy’s decision to standardised the Indian Sign Language(ISL)is being criticised by a large community of people who have been associated with the education of the speech and hearing impaired students. They have been looking at the NEP’s move towards the standardisation of the ISL as problematic and have shown scepticism towards this decision. Such critics feel that just like we celebrate diversity in terms of the many oral languages that we have in India such as Bengali, Tamil, Marathi, Assamese or Bhojouri, we should also celebrate the diversity that we have in the ISLs.

The problem that the hearing and speaking impaired students have is not about the diversity of the sign languages, the actual issues are quite different. Moreover, standardisation of the ISL is a much bigger problem in India because we don’t have a proper research on it and the variations within it are not properly documented yet.

There is also an absence of a data corpus on the ISL and therefore any attempt to standardise it is quite unjust and unfair. The NEP says,

“ Indian Sign Language will be standardised across the country, and national and state curriculum materials developed, for use by students with hearing impairment. Local sign languages will be respected and taught as well. Where possible and relevant. NIOS will develop high-quality modules to teach Indian Sign Language, and to teach other basic subjects using Indian Sign Language.”

The biggest problems faced by children with hearing ability is that there is lack of available study material in local and national sign languages or when there is an availability, it is often of very bad standard. The availability of quality material in local and national sign language is the need of the hour and we also need to have more programs where deaf people are trained to become professionals in the area of their respective education and once we have enough deaf people as professionals in the field, the gap can be bridged to a great extent.

The critics also ague that there is a need to develop a national curriculum framework in Indian Sign Language and have also written a letter to the Ministry of Education demanding it.



International Day of Sign Languages: Recognising deaf culture

In terms of first language speakers ISL would be the sixth biggest official Indian language

Demand to make ISL 23rd officially recognised language of India

According to the World Health Organisation, in 2018, over 63 million Indians suffered from significant Hearing Impairment. Most of these depend upon sign language as a means of communication. However, the number of certified Indian Sign Language (ISL) interpreters is barely 300, as per the Indian Sign Language and Research Training Centre (ISLRTC), a government institution set up in 2015 in Delhi to promote learning of ISL. Amid lack of schools, trainers and regard, the deaf culture demands its recognition in India.

“It is such a shame that we only have close to 800 ISL interpreters in the entire country, among which only 300 are certified. Even the census is about a decade old. I am sure the number of people with hearing disability must have increased now,’’ Nipun Malhotra, a disability rights activist in Delhi, tells Media India Group.

In September 2018, Malhotra, who lives with a locomotor disability himself, filed a petition in the Delhi High Court to make Indian Sign Language India’s 23rd official language so that it can be preserved and promoted by the government. Though his petition was rejected by the high court, he says it started a much needed conversation around the ‘Deaf culture’ in India.

Deaf culture stands against the idea to force people to hear, insisting that oral language is not the only language that deserves legitimacy. “A fully formed linguistic culture exists around sign language and the idea that the hearing impaired people need to be ‘fixed’ by making them hear is flawed at its core. Deaf culture dismantles this idea, by emphasising the formation of strong communities, shared hobbies, and collective experiences,” Malhotra explains.

Malhotra is a sign language instructor at Noida Deaf Society, a classroom for learning ISL, in a three-storeyed building in Noida, on the outskirts of the national capital Delhi. He is one of the six ISL teachers who teach a group of 30 hearing impaired children and teenagers weekly.

To Malhotra and many others’ joy, the demand to add ISL to the list of officially recognised languages in India has resurfaced in last few months.

Bollywood actor Ranveer Singh recently released a sign language music video by rapper and poet, Spitfire called Vartalap (conversation) with deaf signer Hardeep Singh in ISL. The video, produced by Singh’s label IncInk, is part of a campaign to make ISL the 23rd official language of India. In this context, the actor also signed a petition by the National Association of the Deaf India.

The Covid-19 lockdown has been extremely difficult for India’s hearing impaired. Most orders, notices and clarifications were not accessible to them. “Children with hearing disabilities who were sent home from school were unable to study because many parents didn’t know ISL. Many could not call helplines or healthcare centres and that is why, it’s time we refocus on educating Indians on ISL and making it an official language,” adds Malhotra.

One of Malhotra’s students, 20-year-old Jyoti Makhija explains that her private school had no ISL-trained teachers or interpreters. As a result, she and her friends invented a personalised sign language to communicate, which Goyal explains, is a common practice among persons with hearing disability and others to whom language is denied. She says that she doesn’t view sign language as forced because of her hearing disability but as a unique culture, of which she is a part.

“I teach my parents and sibling what I learn here and now we’re able to make small conversations. I was embarrassed to express myself in sign language at public places or even in front of my friends until I came here and realised that it is not forced upon us, but a chosen culture to be cherished,” Makhija explains in sign language.

“The deaf are a tightly-knit community. They view deafness not as a medical condition to be cured, but as a cultural identity to be celebrated. If you look at any foreign language in India, it would have thousands of interpreters as against ISL, that’s an Indian language,” says Dhriti Goyal, who is a trained interpreter of sign language.

A thriving example of deaf culture exists in New Delhi’s Kamla Market. The Delhi Association for the Deaf was started in 1950, though it took on its present name only in 1977. Until then it was called the Deaf and Dumb Association – derogatory terms that have since been replaced with growing public awareness about the usage of ISL.

Members of the association participate in annual events like sports day (for school children), annual day, dating and marriage congregations, picnics and festival celebrations and avail assistance in navigating interactions with governments, local bodies and legal as well as other institutions. Every Wednesday and Saturday, members also come to the association’s premises to socialise. “These societies and gatherings keep the people of the community active and puts pressure on the ISLRTC for demanding their rights and making institutions across the country more comfortable and friendlier for deaf people,” Goyal says.

Though there is a very long and difficult way ahead for the deaf community in India to get recognised and be free of stigma and participate in the daily affairs of the society and country as an equal member, Goyal and Malhotra count on the recent achievements as a step towards a better tomorrow.

“In 2019 Cricket World Cup, for the first time there were sign language commentators and in March, ISLRTC came up with the second edition of its sign-language dictionary, as a follow-up to India’s first-ever ISL dictionary that was launched in 2018,” Goyal mentions.

For now, government programs focusing on skill development for people with disabilities and the improvement of physical and workforce accessibility are seen as steps in the right direction. However, Malhotra emphasises the need for awareness campaigns to make India’s deaf community known to the hearing majority.

“People at the policy level should be exposed to places where the deaf are working and learning,” signs Malhotra. “National organisations for the deaf are limited to Delhi and Mumbai, but they need to be scaled up and replicated across the country.”


குழந்தை இரண்டு வயசாகியும் பேசலன்னா காரணம் என்னவா இருக்கும்? என்ன செய்யணும்?


குழந்தைகள் ஒரு வயதுக்கு முன்பே வா, போ, தா என்று ஒரு வார்த்தையை பேசுவார்கள். சில குழந்தைகள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்வோம்.

பொதுவாக குழந்தைகள் மூன்றாம் மாதம் முதலே அம்மாவின் வாய் அசைவை பார்ப்பார்கள். குழந்தையிடம் பேச தொடங்கும் போது குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்து ஜொள் விடுதல் உண்டாகும். இதை பார்த்தாலே குழந்தை வேகமாக பேசதொடங்கும் என்று சொல்வார்கள்.

அதற்கேற்ப குழந்தையும் ங்,ஞ, த் என்று சத்தம் எழுப்பும். அம்மாக்கள் குரல் எங்கிருந்தாலும் சட்டென்று திரும்பி பார்க்கும். இதை கொண்டு குழந்தையின் காது நன்றாக கேட்பதையும் உறுதி செய்யமுடியும். சில குழந்தைகள் வளர்ச்சி அடைந்தாலும் பேசும் திறன் மட்டும் குறைவாக இருக்கும். தாமதமாகும் பேச்சுத்திறனுக்கு என்ன காரணம் எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

குழந்தை ஒரு வயதுக்குள் தா, தா, ம், ம் என்று பேசுவதோடு ஒரு சில வார்த்தைகளை புரிந்துகொண்டு திரும்பி ஒற்றை எழுத்தில் பேசவும் தொடங்கும். பிறகு படிப்படியாக இரண்டு வார்த்தைகள், ஒரு சொற்றொடர் என்று பேசவும் தொடங்கும். ஆனால் இவை எதுவுமே இல்லாமல் குழந்தை மற்றவர்களது பேச்சை மட்டும் உற்றுகேட்டு பதில் அளிக்கவோ அல்லது அதற்கான முயற்சி செய்யவோ இல்லாமல் இருந்தால் அது மொழி தாமதம் என்று சொல்லலாம்.

குழந்தைகள் உரிய வயதில் உரிய வளர்ச்சியில் அடைய வேண்டிய அத்தனை விஷயங்களையும் சீராக பெற்றிருக்க வேண்டும். அதில் ஒன்று உரியவயதில் பேச்சு திறன் கொண்டிருப்பது. குழந்தைகள் பேசுவதில் சிரமத்தை சந்தித்தால் சமயங்களில் அவர்களுக்கு காது கேட்பதில் குறைபாடு, பேச்சு திறன் அறிவாற்றலில் குறைபாடு இருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்.

​குழந்தைக்கு பேச்சுத்திறன் குறைபாடு

குழந்தைக்கு பேச்சுதிறன் குறைபாடு என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உங்கள் பேச்சு புரிந்துகொள்ளாததால் அவர்களால் உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போகலாம். அல்லது அவர்கள் பதில் அளிப்பது சிரமமாக இருக்கலாம். அதனால் மொழி பற்றாக்குறையா அல்லது அவர்கள் பதில் அளிப்பது அதாவது பேசும் திறன் பற்றாக்குறையா என்பதை கவனியுங்கள். பெரும்பாலும் பேசும் திறன் தான் குழந்தைக்கு குறைபாடாக இருக்கும்.

இதற்கான அறிகுறிகள்

ஒரு வருடம் கடந்தும் அவர்கள் மெளனமாகவே இருந்தால் சைகையால் மட்டுமே ந்ர்ஹ பொருளையும் கேட்டால் அது பேச்சுதிறன் குறைபாடாக இருக்கலாம்.

பிறகு 2 வருடங்களை கடந்தும் ஒரு வார்த்தை அல்லது அதையும் பேசாமல் வாயை அசைத்து உடனே அடங்கிவிடுவதும் கூட தாமதமான பேச்சுத்திறன் குறைபாடாகத்தான் இருக்கும்.

குழந்தை 3 வயதை நெருங்குகிறது ஆனாலும் ஒரு வார்த்தையை சேர்த்து பேசவில்லை. பேசுவதில் சிரமம், உச்சரிப்பிலும் மிக மோசம் போன்றவற்றை கண்டால் அவர்கள் வளரும் போது வார்த்தைகளை சேர்த்து கோர்வையாக்கி பேச அதிகம் திணறுவார்கள்.

காரணங்கள்


குழந்தைக்கு கேட்கும் திறனில் குறைபாடு இருக்கலாம். இதை குழந்தையின் 3 அல்லது 4 ஆம் மாதத்திலேயே கண்டறிந்துவிட முடியும். ஒருவேளை இதை கவனிக்க தவறினால் குழந்தை வளர வளர பேசுவதை கேட்க முடியாமல் அவர்கள் பேசுவது சிரமமாக இருக்கலாம்.

ஆட்டிஸம் பாதித்த குழந்தைக்கும் இந்த குறைபாடு நேரலாம். இதனால் இவர்களது உடல் தகவல் தொடர்புகளை பாதிக்கிறது. உளவியல் ரீதியாகவும் இந்த குறைபாடு நேரலாம்.இது வெகு அரிதானது என்பதால் குழந்தை பேசாவிட்டால் இதுதான் காரணம் என்று பயந்துவிட வேண்டாம்.

கற்றல் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் வளர்ந்த பிறகு தான் கற்றல் குறைபாடு நேரிட வாய்ப்புண்டு என்று சொல்லலாம். அறிவுசார்ந்த குறைபாடுகள் என்றும் இதை சொல்வதுண்டு.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போதுமான கொழுப்புச்சத்து இல்லையென்றாலும் இந்த பிரச்சனை வரக்கூடும். குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருந்தாலும் அதை தூண்டி குழந்தையை பேச வைக்கும் பொறுப்பு குழந்தையின் குடும்பத்திடமே உண்டு.

வெகு அரிதாக குழந்தையின் தொண்டையில் அழற்சி, நாக்கு தொடர்பான நரம்புகளில் கோழைக்கட்டுதல், நரம்பு திசுக்களின் வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையின் நாக்கு புரண்டு பேச்சு தாமதப்படும்.

​யாருக்கு பாதிப்பு அதிகம்



நமது முன்னோர்கள் பேச்சு வழக்கில் ஆண் குழந்தைகள் சீக்கிரம் பேசமாட்டார்கள் என்று சொல்வார்கள். உண்மை தான் பெண் குழந்தைகளை காட்டிலும் ஆண் குழந்தைகள் தான் பேச்சு திறனில் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் யாரேனும் திக்கு வாயாக பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தால் அவர்கள் தாமதமாக பேச வாய்ப்புண்டு.

​என்ன செய்யலாம்


குழந்தை இரண்டு வயதுக்கு பிறகும் பேசவில்லை என்றால் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். அவர் குழந்தையை பரிசோதித்து செவித்திறன், மூளையின் செயல்பாடு பரிசோதித்து குறைபாடு இருந்தால் அதற்கு சிகிச்சை அளிப்பார்.

மாறாக அவை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் பேச்சு மொழி நிபுணரிடம் ஆலோசனை பெற பரிந்துரைப்பார். அவர்கள் குழந்தையின் பேச்சுதிறன் குறைபாடா அல்லது புரிந்து கொள்ளுதலில் குறைபாடா என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பார்கள்.

​சீக்கிரம் பேச்சு வளர


குழந்தைக்கு தாமதமான பேச்சுதிறன் இருப்பதாக உணர்ந்தால் பெற்றோர்கள் குழந்தையின் அருகில் அமர்ந்து பேச்சு கொடுக்க வேண்டும். குழந்தைக்கான புத்தகங்களை வைத்துகொண்டு குழந்தைக்கு அந்த வார்த்தைகளை கற்றுத்தர வேண்டும்.

குழந்தைக்கு உணவு பிசையும் போது அந்த உணவின் பெயரை சொல்லிகொண்டே இருக்கவேண்டும். மம்மு சாப்பிடு, தண்ணி குடி, உச்சாபோ என்று சொல்ல சொல்ல குழந்தை தனக்கு வேண்டியதை திருப்பி கேட்கும். இதை குழந்தையின் ஆறாம் மாதம் முதலே செய்ய தொடங்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கதை சொல்ல வைக்கலாம்.

குழந்தை தனியாக இருக்கும் நேரத்தில் குழந்தை பாடல்களை போட்டு கேட்க விடலாம். பார்க்க விடலாம். குடும்பத்தில் எல்லொரும் அமர்ந்து குழந்தையை சுற்றி பேச வைக்கலாம். இதையெல்லாம் செய்துவந்தாலே குழந்தை வேகமாக பேச ஆரம்பிக்கும். குழந்தை வளரும் போது மட்டுமல்ல வளர்ந்த குழந்தையை பேச வைக்கவும் இதை தவிர்க்காமல் செய்தால் சிகிச்சையோடு குழந்தை பேசவும் தொடங்கும்.

குழந்தைகள் பேச்சு வரவில்லை என்றால் உடனே ஏதோ கோளாறு என்று நினைத்து பயப்பட வேண்டாம். சில பெற்றோர்கள் குழந்தை மழலையில் பேசினால் கூட பேச்சு தெளிவில்லை என்று நினைத்து பயந்துவிடுவார்கள். ஆனால் இது சாதாரணமானது தான். அதே போன்று உடல் ஆரோக்கியமாக இருந்தும் குழந்தை தாமதமாக பேசலாம். குறைபாடு இருந்தாலும் ஆரம்பத்தில் பார்ப்பதன் மூலம் சிகிச்சை மூலம் குழந்தையை விரைவாக பேசவும் வைக்கமுடியும்.



செப்டம்பர் 23: உலக சைகை தினம்..!!


சர்வதேச சைகை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய மொழிகள் தோன்றுவதற்கு முன் உலகில் முதன் முதலாக தோன்றிய மொழி சைகை மொழி. பழங்கால மனிதர்கள் தனது எண்ணத்தையும், உணர்வையும் சொல்வதற்கு எந்த சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் எப்போதும் சைகை மொழியில் தான் கை கொடுக்கிறது. சுமார் 7 கோடி மக்கள் காதுகேளாத தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என சைகை மொழி பலவகையாக உள்ளது. சும்மா கையை மட்டும் ஆட்டினால் அது சைகை மொழி ஆகாது. அதற்கு இலக்கணத் தன்மை வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ராதாமோகன் இயக்கிய மொழி உள்ளிட்ட படங்கள் காது கேளாதவர் பற்றியும், சைகை மொழியை பற்றி எடுத்துரைத்தது. வாய் பேச முடியாதவர்களின் கஷ்டங்களை நவீன கால அறிவியல் நீக்கியிருக்கிறது. சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அப்ளிகேஷன்களும், கருவிகள் வந்துவிட்டன.

காது கேளாதோர் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வண்ணம் சில தமிழ் செய்தி ஊடகங்கள் சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சைதை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தினத்தையொட்டி காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள் நம்பிக்கை தரும் வகையிலும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினத்தில் அவர்களின் எண்ணங்களை காது கொடுத்து கேட்க உறுதி ஏற்றுக் கொள்வோம்.

கவனம் பெறுமா செவித்திறன் குறைந்தோர் குரல்?

22.09.2020
மாற்றுத் திறனாளிப் பள்ளி மாணவர்களையும் சென்றடையும் வகையில் இணையவழிக் கல்வி, கரோனா பேரிடர் காலத்தில் கற்பிக்கப்படுகிறதா என்ற கேள்வியை மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் எழுப்பியிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நெடுநாட்களாக கவனிப்பாரற்று இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சைகை மொழிக் காணொலிகள், கல்வித் தொலைக்காட்சி யூடியூப் அலைவரிசையில் சமீப நாள்களாகப் பதிவேற்றப்பட்டுவருகின்றன. இதைத் தவிர்த்து அந்த மாணவர்களின் கோரிக்கைகள் கவனம் பெற்றிருக்கின்றனவா?

ஒரே கல்வித்திட்டம் எப்படி சரி?

“தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டமே புதுச்சேரியிலும் பின்பற்றப்பட்டுவருகிறது. காது கேளாத, பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இலவச உண்டு உறைவிட அரசுப் பள்ளி எங்களுடையது. காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்புக் குழந்தைகள், இங்கே படித்துவருகிறார்கள். கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டார்கள். இணையம்வழியே சைகை மொழிப் பாடம் கற்பிக்கும் பணியை ஒரு மாதமாகச் செய்துவருகிறோம். ஆனால், ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்ளும் வசதியுடன் அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் அலைபேசியை இரவல் வாங்கிப் படிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெருவாரியான மாணவர்களின் நிலை இதுவே.

காது கேளாத மாணவர்களுக்கே உரிய தனிப்பட்ட சிக்கல்களோ இன்னும் வேறுபட்டவை. மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் அரசால் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், பிறவியிலேயே காது கேளாமல் இருப்பவர்களால் பேச முடியாது என்கிற குறைந்தபட்ச விழிப்புணர்வுகூடப் பலருக்கும் இல்லை. கல்வித் துறையிலும்கூட இந்த புரிதல் போதுமான அளவு இல்லை.

செவித் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் தேர்வு எழுதக் கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதிப்பது, ஒரே ஒரு மொழிப் பாடத்தைப் படிப்பது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஆனாலும் வழக்கமான பாடத்திட்டத்தையே இவர்களும் படித்துத் தேற வேண்டுமென்பது, இந்தக் குழந்தைகள் மீது சுமத்தப்பட்டுள்ள பெருஞ்சுமை. கேட்டல், பேசுதல் வாய்க்கப் பெறாத இவர்களுக்கு என்னதான் மொழிப் பயிற்சி அளித்தாலும், அவர்களால் மற்றவர்களைப் போல் படித்துத் தேர்வு எழுத முடிவதில்லை. கணிதம், சமூக அறிவியலில் வரைபடம் உள்ளிட்டவற்றை இவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்கிறார்கள். படிப்பைவிட விளையாட்டு, நடனம், ஓவியம் போன்ற தனித்திறமைகளில் ஜொலிக்கிறார்கள்.

அதனால் வழக்கமான கல்வித் திட்டத்திலிருந்து மாறுபட்ட கல்வித் திட்டம் இவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட வேண்டும்” என்கிறார் புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள ஆனந்தரங்கம் பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஒருவர்.

இணையப் பிரச்சினைகள்

“செவி, பேச்சுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச உணவு, உறைவிடத்துடன் கல்வி வழங்கிவரும் தனியார் பள்ளி எங்களுடையது. கரோனா ஊரடங்கின் காரணமாக மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டோம். நாங்களே பிரத்யேகமாகத் தயாரிக்கும் சைகை மொழிக் காணொலிகளை இரண்டு மாதங்களாக இணையம்வழியே அவர்களுக்கு அனுப்பி வருகிறோம். ஆனால், இங்கு படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோரின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். அவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதியெல்லாம் இல்லை.


வழக்கமான கல்வித் திட்டத்தில் படிப்பது செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மிகவும் கடினம். மொழித்திறனே தடையாக இருப்பதால், அவர்களுக்கு சுயமாகச் சிந்தித்து எழுதுவது சிக்கலாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் பாடச் சுமையை கணிசமாகக் குறைப்பதும், புளூ பிரிண்ட் வழங்குவதும் அவசியம். அது மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிக்குக் கற்பிக்க அரசு நியமிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படிப் பல அம்சங்கள் அரசு கவனமெடுத்துச் செயல்பட வேண்டிய தேவையுள்ளது” என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் உள்ள பான் செக்கர்ஸ் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆண்டனி பிரியா.

சம்பளமில்லா ஆறு மாதம்!

“சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காகப் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ரூ. 15,000 மாதச் சம்பளம் வழங்குகிறது. கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு மாதங்களாக அதுவும் தரப்படவில்லை. என்றாலும் ஆகஸ்ட் 3ஆம் தேதியிலிருந்து இணையம்வழியே சைகை மொழிப் பாடத்தை எங்களுடைய மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறோம். ஆனால், பெரும்பாலோரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

வழக்கமான முறையில் உருவாக்கப்பட்ட காணொலிகளில் சைகை மொழியை இணைத்து, தற்போது கல்வித் தொலைக்காட்சி யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றப்படுகிறது. ஆனால், மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதை பார்த்துப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்” என்கிறார் சைகை மொழியில் கணினி அறிவியல் படித்துத் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்துவரும் முனைவர் என்.வினோத்.

2011-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3 லட்சத்து 318 பேர் செவி, பேச்சுத்திறன் சார்ந்த மாற்றுத் திறனாளிகள். 2020-ல்இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கக்கூடும். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், மாற்றுத் திறனாளி மாணவர்களில் ஒரு பிரிவினரான செவி, பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களுக்கு உரிய தனிக் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். அத்துடன் இது சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இணையவழிக் கல்வி மட்டுமே தற்போதுள்ள மாற்று ஏற்பாடு என்கிற நிலையில், இந்தப் பிரிவு சார்ந்த அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட்போனைக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை அரசு முடுக்கிவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் உரியவர்கள் காதில் ஒலிக்குமா?




Tuesday, September 22, 2020

அரசு செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

21.09.2020
சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, சூரமங்கலம் ரயில் நிலையச் சந்திப்பு அருகில் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில், முன்பருவப் பள்ளி 4 வயது முதல் 10-ஆம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு, சிறப்பு கல்வியுடன், தொழிற்பயிற்சியும், கணினி பயிற்சியும் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இலவச விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், பகல் நேர மாணவா்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வி உபகரணங்கள், காதொலிக் கருவிகள் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியரின் பெற்றோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வயது சான்று, சாதிச் சான்று, சிறப்புக் கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியை 9499933469, 04272442067 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம், 0427-2415242 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக அறிவிக்க கோரிக்கை - நடிகர் ரன்வீர் சிங்கின் முயற்சிக்கு காதுகேளாதோர் பாராட்டு


20.09.2020
சைகை மொழியை இந்தியாவின் 23வது அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி நடிகர் ரன்வீர் சிங் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்திய சைகை மொழியை 23வது சைகை மொழியாக அறிவிக்குமாறு நடிகர் ரன்வீர் சிங் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் ரன்வீர் சிங் மனு அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய இசை நிறுவனமான இன்க்இன்க் (IncInk) மூலம் நவ்ஸார் இரானி என்பவரை வைத்து காது கேளாதாருக்கான இசை நிகழ்ச்சியையும் ரன்வீர் சிங் நடத்தினார்.

ரன்வீர் சிங்கின் இந்த முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகின்றன. இந்திய சைகை மொழி அழகானது. காது கேளாதோர் சமூகத்துக்கு ஆதரவு தரும் ரன்வீர் சிங்குக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு காது கேளாதார் அமைப்பின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.


சைகை மொழி அவசியமா?

 

சர்வதேச சைகை மொழி தினம் - செப்., 23

மனிதன், தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி, சைகை மொழி

* சைகை மொழி என்பது, பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகளுடன் பேசப்படுவது

* உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என, பல உள்ளன

* அமெரிக்க சைகை மொழியில், ஆங்கிலத்தில் உள்ள, 26 எழுத்துக்களையும், ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட பல கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர்

* பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியை பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, சைகை மொழிகளுக்கும் பல இலக்கணங்கள் உண்டு

* இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்

* உலகில் பல சைகை மொழிகளை பலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்படும், சார்லஸ் மைக்கேல் திலேப்பின்

* காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர், பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதை கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை, பிறர் புரிந்து கொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர், சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது

* மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், 'குளோபல் அபேசியா' போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது

* சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது

* தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல, 'டிவி'யில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன

* சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும். எனவே, சர்வதேச சைகை மொழிகள் தினத்தை விழிப்புணர்வுடன் கொண்டாடுவோம்.

ஆர்.திவ்யா

Friday, September 18, 2020

Ranveer Singh supports deaf community, bats to make Indian Sign Language an official language of country!

18.09.2020
Mumbai: Actor Ranveer Singh has been constantly urging authorities to consider and declare Indian Sign Language (ISL) as the 23rd official language of India! The superstar has recently signed a petition aimed at furthering awareness on this relevant cause.

Ranveer Singh's independent record label IncInk, which he has formed with Navzar Eranee, also released sign language music videos – the only record label to initiate this progressive step.

The deaf community in India has wholeheartedly appreciated Ranveer by putting out a heartfelt thank you video for him. Through sign language about 25 members from the deaf community from across India said, “We were very happy to hear the good news about Ranveer Singh, who is a famous Bollywood actor, to support ISL to be recognized as the 23rd official language of India. We are so glad that he supports this. With your support, we felt inspired. Indian sign language is a beautiful language. We want to thank Ranveer for showing support to the Deaf community. We are all happy and grateful to you!”

“IncInk was created as a platform to encourage inclusivity through art and we are deeply committed towards making Indian Sign Language (ISL) become the 23rd official language of India. This progressive step will create a ripple effect in providing equal access across all areas from education to employment to entertainment to more than 10 million Deaf people in India,” said Ranveer, who thanked the deaf community for their resolve.


தையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

18.09.2020
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தையல் இயந்திரம் வழங்க பயனாளிகளிடம் நேர்காணல் நடந்தது.கை, கால் பாதிப்பு, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதக்கு மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் வருமானம் ஈட்டும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்திருந்த 47 நபர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.


Wednesday, September 16, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள்

10.09.2020
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 4,230 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று வழங்கினார். இதில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவர், கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இருவர், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் என, ஐந்து பேர், 21 ஆயிரத்து, 150 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன் உடனிருந்தார்.