FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, September 8, 2020

ஊரடங்கில் குடும்ப வறுமையால் விரக்தி: காது கேளாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

20.08.2020
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர் பகுதியை சேர்ந்தவர் வேளாங் கண்ணி. இவரது மகன் அந்தோணிராஜ் (வயது 19). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் காதுகேளாதோர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சகோதரி ஜெனிபர் என்பவரும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்ப கஷ்டத்திலும் கல்லூரியில் தொடர்ந்து படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஊரடங்கில் வீட்டில் மனமுடைந்து காணப்பட்ட அந்தோணிராஜ், வறுமை வாட்டியதால் விரக்தியில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment