FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, September 16, 2020

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்! விண்ணப்பிக்க உத்தரவு!

16.09.2020
சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை வங்கி கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து இத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment