FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 16, 2020

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்! விண்ணப்பிக்க உத்தரவு!

16.09.2020
சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை வங்கி கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து இத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment