FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, September 16, 2020

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்! விண்ணப்பிக்க உத்தரவு!

16.09.2020
சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை வங்கி கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து இத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment