FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, September 16, 2020

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்! விண்ணப்பிக்க உத்தரவு!

16.09.2020
சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை வங்கி கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து இத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment