FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 25, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி: கலெக்டர்



மதுரை : ''மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும்,'' என, மதுரையில் ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் திறன் பயிற்சி திட்டங்களை ஆன்லைன் மூலம் துவக்கி கலெக்டர் வினய் தெரிவித்தார்.
நிறுவனம் சார்பில் கள்ளந்திரியில் பால்பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, ஊமச்சிகுளத்தில் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. கலெக்டர் பேசுகையில், ''பயிற்சி திட்டங்கள் பயனாளிகளின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.18 முதல் 45 வயதிற்குட்பட்ட யாரும் இந்நிறுவனத்தில் பயிற்சியில் சேரலாம். உணவுடன் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். மதுரையில் 33 ஆண்டுகளில் இந்நிறுவனம் 24,204 பேருக்கு பயிற்சியளித்துள்ளது.


No comments:

Post a Comment