FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 29, 2020

நான்காவது திருமணம் செய்துகொள்ள ஆசை… அதற்கு குறுக்காக நின்ற காது கேளாத வாய் பேச முடியாத மகன் –பெற்ற தாயின் கொடூர செயல்!

27.09.2020
பீகார் மாநிலத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை சேர்ந்தவர் தர்மஷீலா தேவி. இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அருண் சவுத்ரி என்பவரோடு திரும
ணம் நடந்தது. அவர்களுக்கு சாஜன் குமார் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த தேவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முகேஷ் சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள அவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் நினைக்கையில் அவரின் குழந்தை அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்.
சிறுவன் காணாமல் போனது குறித்து கிராமத்தாருக்கு சந்தேகம் வர போலிஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தர்மஷீலா மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment