FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 25, 2020

செப்டம்பர் 23: உலக சைகை தினம்..!!


சர்வதேச சைகை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய மொழிகள் தோன்றுவதற்கு முன் உலகில் முதன் முதலாக தோன்றிய மொழி சைகை மொழி. பழங்கால மனிதர்கள் தனது எண்ணத்தையும், உணர்வையும் சொல்வதற்கு எந்த சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் எப்போதும் சைகை மொழியில் தான் கை கொடுக்கிறது. சுமார் 7 கோடி மக்கள் காதுகேளாத தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என சைகை மொழி பலவகையாக உள்ளது. சும்மா கையை மட்டும் ஆட்டினால் அது சைகை மொழி ஆகாது. அதற்கு இலக்கணத் தன்மை வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ராதாமோகன் இயக்கிய மொழி உள்ளிட்ட படங்கள் காது கேளாதவர் பற்றியும், சைகை மொழியை பற்றி எடுத்துரைத்தது. வாய் பேச முடியாதவர்களின் கஷ்டங்களை நவீன கால அறிவியல் நீக்கியிருக்கிறது. சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அப்ளிகேஷன்களும், கருவிகள் வந்துவிட்டன.

காது கேளாதோர் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வண்ணம் சில தமிழ் செய்தி ஊடகங்கள் சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சைதை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தினத்தையொட்டி காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள் நம்பிக்கை தரும் வகையிலும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினத்தில் அவர்களின் எண்ணங்களை காது கொடுத்து கேட்க உறுதி ஏற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment