FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 25, 2020

செப்டம்பர் 23: உலக சைகை தினம்..!!


சர்வதேச சைகை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய மொழிகள் தோன்றுவதற்கு முன் உலகில் முதன் முதலாக தோன்றிய மொழி சைகை மொழி. பழங்கால மனிதர்கள் தனது எண்ணத்தையும், உணர்வையும் சொல்வதற்கு எந்த சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் எப்போதும் சைகை மொழியில் தான் கை கொடுக்கிறது. சுமார் 7 கோடி மக்கள் காதுகேளாத தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என சைகை மொழி பலவகையாக உள்ளது. சும்மா கையை மட்டும் ஆட்டினால் அது சைகை மொழி ஆகாது. அதற்கு இலக்கணத் தன்மை வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ராதாமோகன் இயக்கிய மொழி உள்ளிட்ட படங்கள் காது கேளாதவர் பற்றியும், சைகை மொழியை பற்றி எடுத்துரைத்தது. வாய் பேச முடியாதவர்களின் கஷ்டங்களை நவீன கால அறிவியல் நீக்கியிருக்கிறது. சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அப்ளிகேஷன்களும், கருவிகள் வந்துவிட்டன.

காது கேளாதோர் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வண்ணம் சில தமிழ் செய்தி ஊடகங்கள் சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சைதை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தினத்தையொட்டி காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள் நம்பிக்கை தரும் வகையிலும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினத்தில் அவர்களின் எண்ணங்களை காது கொடுத்து கேட்க உறுதி ஏற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment