FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, September 25, 2020

செப்டம்பர் 23: உலக சைகை தினம்..!!


சர்வதேச சைகை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போதைய மொழிகள் தோன்றுவதற்கு முன் உலகில் முதன் முதலாக தோன்றிய மொழி சைகை மொழி. பழங்கால மனிதர்கள் தனது எண்ணத்தையும், உணர்வையும் சொல்வதற்கு எந்த சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் எப்போதும் சைகை மொழியில் தான் கை கொடுக்கிறது. சுமார் 7 கோடி மக்கள் காதுகேளாத தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்கும் திறன் அற்றவர்களாகவும்,20 லட்சம் மக்கள் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் சைகை மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என சைகை மொழி பலவகையாக உள்ளது. சும்மா கையை மட்டும் ஆட்டினால் அது சைகை மொழி ஆகாது. அதற்கு இலக்கணத் தன்மை வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ராதாமோகன் இயக்கிய மொழி உள்ளிட்ட படங்கள் காது கேளாதவர் பற்றியும், சைகை மொழியை பற்றி எடுத்துரைத்தது. வாய் பேச முடியாதவர்களின் கஷ்டங்களை நவீன கால அறிவியல் நீக்கியிருக்கிறது. சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அப்ளிகேஷன்களும், கருவிகள் வந்துவிட்டன.

காது கேளாதோர் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வண்ணம் சில தமிழ் செய்தி ஊடகங்கள் சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சைதை தினம் செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தினத்தையொட்டி காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள் நம்பிக்கை தரும் வகையிலும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினத்தில் அவர்களின் எண்ணங்களை காது கொடுத்து கேட்க உறுதி ஏற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment