FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, September 22, 2020

சைகை மொழி அவசியமா?

 

சர்வதேச சைகை மொழி தினம் - செப்., 23

மனிதன், தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி, சைகை மொழி

* சைகை மொழி என்பது, பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகளுடன் பேசப்படுவது

* உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என, பல உள்ளன

* அமெரிக்க சைகை மொழியில், ஆங்கிலத்தில் உள்ள, 26 எழுத்துக்களையும், ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட பல கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர்

* பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியை பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, சைகை மொழிகளுக்கும் பல இலக்கணங்கள் உண்டு

* இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்

* உலகில் பல சைகை மொழிகளை பலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்படும், சார்லஸ் மைக்கேல் திலேப்பின்

* காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர், பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதை கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை, பிறர் புரிந்து கொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர், சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது

* மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், 'குளோபல் அபேசியா' போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது

* சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது

* தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல, 'டிவி'யில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன

* சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும். எனவே, சர்வதேச சைகை மொழிகள் தினத்தை விழிப்புணர்வுடன் கொண்டாடுவோம்.

ஆர்.திவ்யா

No comments:

Post a Comment