FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, September 22, 2020

இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக அறிவிக்க கோரிக்கை - நடிகர் ரன்வீர் சிங்கின் முயற்சிக்கு காதுகேளாதோர் பாராட்டு


20.09.2020
சைகை மொழியை இந்தியாவின் 23வது அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி நடிகர் ரன்வீர் சிங் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்திய சைகை மொழியை 23வது சைகை மொழியாக அறிவிக்குமாறு நடிகர் ரன்வீர் சிங் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் ரன்வீர் சிங் மனு அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய இசை நிறுவனமான இன்க்இன்க் (IncInk) மூலம் நவ்ஸார் இரானி என்பவரை வைத்து காது கேளாதாருக்கான இசை நிகழ்ச்சியையும் ரன்வீர் சிங் நடத்தினார்.

ரன்வீர் சிங்கின் இந்த முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகின்றன. இந்திய சைகை மொழி அழகானது. காது கேளாதோர் சமூகத்துக்கு ஆதரவு தரும் ரன்வீர் சிங்குக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு காது கேளாதார் அமைப்பின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment