FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 22, 2020

அரசு செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

21.09.2020
சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, சூரமங்கலம் ரயில் நிலையச் சந்திப்பு அருகில் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில், முன்பருவப் பள்ளி 4 வயது முதல் 10-ஆம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு, சிறப்பு கல்வியுடன், தொழிற்பயிற்சியும், கணினி பயிற்சியும் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இலவச விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், பகல் நேர மாணவா்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வி உபகரணங்கள், காதொலிக் கருவிகள் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியரின் பெற்றோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வயது சான்று, சாதிச் சான்று, சிறப்புக் கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியை 9499933469, 04272442067 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம், 0427-2415242 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment