FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, September 22, 2020

அரசு செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

21.09.2020
சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, சூரமங்கலம் ரயில் நிலையச் சந்திப்பு அருகில் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில், முன்பருவப் பள்ளி 4 வயது முதல் 10-ஆம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு, சிறப்பு கல்வியுடன், தொழிற்பயிற்சியும், கணினி பயிற்சியும் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இலவச விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், பகல் நேர மாணவா்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வி உபகரணங்கள், காதொலிக் கருவிகள் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியரின் பெற்றோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வயது சான்று, சாதிச் சான்று, சிறப்புக் கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியை 9499933469, 04272442067 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம், 0427-2415242 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment