FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, September 22, 2020

அரசு செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

21.09.2020
சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, சூரமங்கலம் ரயில் நிலையச் சந்திப்பு அருகில் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியில், முன்பருவப் பள்ளி 4 வயது முதல் 10-ஆம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களைக் கொண்டு, சிறப்பு கல்வியுடன், தொழிற்பயிற்சியும், கணினி பயிற்சியும் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் அனைத்துப் பாடங்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இலவச விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், பகல் நேர மாணவா்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வி உபகரணங்கள், காதொலிக் கருவிகள் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியரின் பெற்றோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வயது சான்று, சாதிச் சான்று, சிறப்புக் கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியை 9499933469, 04272442067 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம், 0427-2415242 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment