FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 14, 2020

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம்

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு காது கேளாத நிலையிலிருக்கும் நாலாம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது சிறுமி தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .கடந்த வாரம் அந்த சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 14 வயதான மூன்று சிறுவர்கள் அந்த சிறுமியிடம் வந்து பேச்சுக்கொடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான் இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய அந்த சிறுமி அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு சென்றார் .அப்போது அந்த சிறுவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்களாம் .இப்படி அவர்கள் பலமுறை இந்த செயலில் ஈடுபட்டார்களாம் .
பிறகு அந்த சிறுமி வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயாரிடம் இந்த விஷயத்தை கூறியதும் ,அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியனர் .பிறகு அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார்கள் .


No comments:

Post a Comment