FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, September 27, 2020

சிறுமியை கத்தரிக்கோலால் அறுத்து கொலை செய்த வாய் பேச முடியாத சிறுவன்!!


26.09.2020
விழுப்புரம் : பள்ளி மாணவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். இவருடைய தந்தை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

தாய், நூறுநாள் வேலைக்கு சென்றிருந்தார். மாணவியின் தம்பியும், தங்கையும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத சென்னையில் உள்ள காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் சீனுவாசான் என்ற 16 வயதுடைய சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தான்.

பின்னர் அந்த சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அதற்கு மாணவி கூச்சல் போட்டாள். ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் மாணவியின் வயிறு, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினான். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட மாணவி அதே இடத்திலேயே உயிரிழந்தாள்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அப்போது அந்த சிறுவன் ரத்தக்கறை படிந்த கத்திரிக்கோலுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். பொதுமக்களை பார்த்ததும், சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும், இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள், அந்த சிறுவனை கண்டித்ததோடு அவனது பெற்றோரிடமும் இதுபற்றி கூறி எச்சரிக்கை செய்தனர்.

இந்த சூழலில் மாணவி மட்டும் அவளது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சிறுவன், அத்துமீறி அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே மாணவி கூச்சல் போடவே ஆத்திரமடைந்து கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment