FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, September 27, 2020

சிறுமியை கத்தரிக்கோலால் அறுத்து கொலை செய்த வாய் பேச முடியாத சிறுவன்!!


26.09.2020
விழுப்புரம் : பள்ளி மாணவியை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாற்றுத்திறனாளி சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். இவருடைய தந்தை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

தாய், நூறுநாள் வேலைக்கு சென்றிருந்தார். மாணவியின் தம்பியும், தங்கையும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத சென்னையில் உள்ள காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் சீனுவாசான் என்ற 16 வயதுடைய சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தான்.

பின்னர் அந்த சிறுவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அதற்கு மாணவி கூச்சல் போட்டாள். ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் மாணவியின் வயிறு, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினான். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட மாணவி அதே இடத்திலேயே உயிரிழந்தாள்.

இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அப்போது அந்த சிறுவன் ரத்தக்கறை படிந்த கத்திரிக்கோலுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். பொதுமக்களை பார்த்ததும், சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும், இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள், அந்த சிறுவனை கண்டித்ததோடு அவனது பெற்றோரிடமும் இதுபற்றி கூறி எச்சரிக்கை செய்தனர்.

இந்த சூழலில் மாணவி மட்டும் அவளது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சிறுவன், அத்துமீறி அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே மாணவி கூச்சல் போடவே ஆத்திரமடைந்து கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment