FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, September 27, 2020

காதுக்கு எட்டியது! காது கேளாதோரின் கோரிக்கை:கிடைத்தன மாற்றுக்கருவிகள்

25.09.2020
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனையில், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ரூ.7 லட்சம் மதிப்பிலான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை 218 குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், செவித்திறனுக்காக பொருத்தப்பட்டுள்ள கருவி பழுதடைந்த, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 32 குழந்தைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில், மாற்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் கூறியதாவது:ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மதிப்புடைய இக்கருவியை, அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது.இதனால், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுக்கருவிகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுக்கருவிகள் வழங்குவதற்கும், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்பதற்கு, உள்பகுதியில் செவிச்சுருள் பதியம் என்ற கருவியும், வெளிப்பகுதியில் ரிசீவர் டிரான்ஸ்மிட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகளால், ஒலியை கேட்க முடிகிறது.ஆரம்பத்தில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மட்டுமே, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கருவிகள் பழுதடைந்தால், புதிய கருவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, 5 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment