FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, September 28, 2020

13 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன் - 16 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கைது

26.09.2020
விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பெற்றோர் கட்டட வேலைக்கு செல்லவே, வீட்டில் தன் தம்பி, தங்கையோடு இருந்துள்ளார் அந்த சிறுமி. தம்பியும் தங்கையும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான அந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், சிறுமி சத்தம் போடவே, மாணவியின் வாயை துணியால் பொத்தி அவரிடம் மீண்டும் அத்துமீற முயன்றுள்ளார். ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி எதிர்க்கவே, ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் மாற்றுத்திறனாளியான சிறுவன், சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்ததாகவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சிறுவன், சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுவனின் தொல்லை குறித்து சிறுமி தன்பெற்றோரிடம் கூறவே, அவர்களும் சிறுவனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், இந்த கொடூர செயலை செய்துள்ளார். தன்னுடைய காதலை சிறுமி ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதோடு அவரை கொடூரமாகவும் கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment