FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, September 28, 2020

13 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன் - 16 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கைது

26.09.2020
விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பெற்றோர் கட்டட வேலைக்கு செல்லவே, வீட்டில் தன் தம்பி, தங்கையோடு இருந்துள்ளார் அந்த சிறுமி. தம்பியும் தங்கையும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான அந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், சிறுமி சத்தம் போடவே, மாணவியின் வாயை துணியால் பொத்தி அவரிடம் மீண்டும் அத்துமீற முயன்றுள்ளார். ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி எதிர்க்கவே, ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், தப்பி ஓட முயன்ற சிறுவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் மாற்றுத்திறனாளியான சிறுவன், சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்ததாகவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சிறுவன், சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுவனின் தொல்லை குறித்து சிறுமி தன்பெற்றோரிடம் கூறவே, அவர்களும் சிறுவனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், இந்த கொடூர செயலை செய்துள்ளார். தன்னுடைய காதலை சிறுமி ஏற்றுக் கொள்ளாத ஆத்திரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதோடு அவரை கொடூரமாகவும் கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment