FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 16, 2020

’பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

18.08.2020
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி, பையூா் பிள்ளைவயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.


இதில் வீடுகள் பெற விரும்பும் வீடுகள் இல்லாத மாற்றுத்திறனுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகா்ப்புற நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிப்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆட்சேபகரமான நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவா்களுக்கு மாற்றுக் குடியிருப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் மேற்கண்ட ஆவணங்களுடன் சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு குடியிருப்பு கட்ட ஆகும் கட்டுமானத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளி பங்களிப்பு தொகையாக வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment