FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, September 16, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம்: மாநகராட்சி மூலம் பெறுவது எப்படி?- ஆணையர் விளக்கம்


12.09.2020
கரோனா தடை உத்தரவு காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ.1000/- நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் எப்படி பெறுவது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு:

“கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி ரூ.1000/- ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்திருக்கும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000/- நிவாரண நிதி ரொக்கமாக வழங்குவதற்காக, மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் கோட்டம் மற்றும் பகுதி வாரியாக பெறப்பட்டு, அவர்களுக்கு நிவாரண நிதி தொகையான ரூ.1000/- இதுநாள் வரை 23,841 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,38,41,000/- வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தடை உத்தரவு காலத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றுகளை தங்கள் இருப்பிடத்திற்கு வந்து நிவாரணத்தொகை வழங்கும் களப்பணியாளர்களிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-24714758 என்ற எண்ணில் அலுவலக நேரங்களிலும், 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு மேற்படி திட்டத்தில் பயனடையுமாறு ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment