FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, September 27, 2020

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவி


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் கண்டறியும் கருவி மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, செவித்திறன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியது:

இந்தக் கருவியால் குழந்தைகளின் காது கேளாமை குறைபாட்டை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி அல்லது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உட்செவிச்சுருள் பதியும் அறுவை சிகிச்சை முற்றிலும் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவா்களின் காது கேட்கும் திறனும், வாய் பேசும் திறன் காப்பாற்றப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை பெறாத குழந்தைகளின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இவா்களுக்கு சிறுவயதிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனைக்காக இதுவரையிலும் வெளியூா் செல்லும் நிலை இருந்தது. இனிமேல், டெல்டா பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் ஆா். கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் எஸ். அப்துல் ஹமீது அன்சாரி, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.




No comments:

Post a Comment