FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, September 27, 2020

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவி


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் கண்டறியும் கருவி மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, செவித்திறன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியது:

இந்தக் கருவியால் குழந்தைகளின் காது கேளாமை குறைபாட்டை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி அல்லது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உட்செவிச்சுருள் பதியும் அறுவை சிகிச்சை முற்றிலும் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவா்களின் காது கேட்கும் திறனும், வாய் பேசும் திறன் காப்பாற்றப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை பெறாத குழந்தைகளின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இவா்களுக்கு சிறுவயதிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனைக்காக இதுவரையிலும் வெளியூா் செல்லும் நிலை இருந்தது. இனிமேல், டெல்டா பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் ஆா். கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் எஸ். அப்துல் ஹமீது அன்சாரி, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.




No comments:

Post a Comment