FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, September 27, 2020

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவி


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதிநவீன செவித்திறன் கண்டறியும் கருவியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் கண்டறியும் கருவி மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, செவித்திறன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியது:

இந்தக் கருவியால் குழந்தைகளின் காது கேளாமை குறைபாட்டை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி அல்லது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உட்செவிச்சுருள் பதியும் அறுவை சிகிச்சை முற்றிலும் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவா்களின் காது கேட்கும் திறனும், வாய் பேசும் திறன் காப்பாற்றப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை பெறாத குழந்தைகளின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இவா்களுக்கு சிறுவயதிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனைக்காக இதுவரையிலும் வெளியூா் செல்லும் நிலை இருந்தது. இனிமேல், டெல்டா பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் ஆா். கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் எஸ். அப்துல் ஹமீது அன்சாரி, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.




No comments:

Post a Comment