FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 8, 2020

பாடிபில்டிங், காது கேளாதோர் விளையாட்டு, பாரலிம்பிக் வீரர்களுக்கு மத்திய அரசுப் பணி

03.09.2020
சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கபடி, ஹாக்கி, தடகளம், வில்வித்தை, சதுரங்கம், கராத்தே உள்ளிட்ட 43 வகையான விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிய மற்றும் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிலையில், அந்தப் பட்டியலில் மேலும் 20 விளையாட்டுகளை சேர்த்துள்ளனர். இது தொடர்பாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக பரிந்துரைக்கு, மத்திய பணியாளர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்பால், பாடிபில்டிங், காது கேளாதோர் விளையாட்டு, போலோ சைக்கிளிங், டக் ஆஃப் வார் உள்ளிட்ட 20 வகையான விளையாட்டுகளுடன் மொத்தம் 63 விளையாட்டுகளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


1 comment: