FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, March 24, 2016

மாற்றுத்திறனாளிகளை அதிமுக அரசு கொச்சைப்படுத்தி விட்டது தேசிய பார்வையற்றோர் இணையம் குற்றச்சாட்டு

24.03.2016, சென்னை: தேசிய பார்வையற்றோர் இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சியின் போது, கடந்த 2010ல் அரசு பணிகளில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாகன படி ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான அரசு இலவச பஸ்பாஸ் மட்டும் வழங்கி விட்டு ஆயிரம் ரூபாய் மாத வாகன படியை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியையும், இலவச பாசையும் ஒன்றிணைத்து பார்ப்பது வேதனையாகவும், தவறாகவும் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கம் போல் வாகன படியாக ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில முழுவதும் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாற்றுத்திறனாளிகள் எப்படியெல்லாம் போராடினார்கள். அவர்கள் பட்ட சித்ரவதை என்ன என்பது நாடறிந்த விஷயம்.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 சதவீதம் இடஒதுக்கீடு, வீட்டு வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேலும், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது இறந்து போன குப்புசாமிக்கு அடையாள அட்டையே கிடையாது என்று அரசிடம் கூறினோம். ஆனால், தமிழக அரசு நீதிமன்றத்திற்கு சென்று அவர் மாற்றுத்திறனாளியே கிடையாறு எனக்கூறி எங்களை கொச்சை படுத்தி விட்டது. இது போன்ற பல்வேறு இன்னல்களை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். வரவிருக்கும் ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும்.எங்களது 12 அம்ச கோரிக்கைகளை 10க்கும் மேற்பட்ட கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.சென்னை ஈசிஆரில் பஸ் மூலம் 6 பைகளில் நகை பரிமாற்றம் ஆந்திர அரசியல் பிரமுகர் தகவலால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டத்திலிருந்து சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் இப்போது பூதாகரமாக வெளிவந்துள்ளது. ஆந்திராவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அரசியல் பிரமுகர் ராகேஷ் ரெட்டி என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் எனது ஜேஆர் ஹேப்பி டிராவல்ஸ் பஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அந்த பஸ்சை ஓட்டிச் சென்ற எனது டிரைவரை மிட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலால் அவர்கள் சொன்னபடி டிரைவர் பஸ்சை மன்னார்குடி என்ற இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பஸ்சில் சுமார் தலா 70 கிலோ எடை கொண்ட 6 பைகளை ஏற்றியுள்ளனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறிய அந்த நபர்கள் பஸ்சை கிழக்கு கடற்கரை சாலைக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலைக்கு பஸ் வந்தவுடன் அந்த நபர்கள் டிரைவரை மீண்டும் மிரட்டி பஸ்சை நிறுத்தச் சொல்லியுள்ளனர். டிரைவர் பஸ்சை நிறுத்தவே அந்த பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் கீழே இறங்கியுள்ளனர்.

அந்த பைகளில் ஒரு பை கொஞ்சம் திறந்திருந்தது. அதில் தங்க நகைகள் ஏராளம் இருந்ததை எனது டிரைவர் பார்த்துள்ளார். நகைகள் அடங்கிய அந்த பைகளை இறக்கிய இடத்தில் உள்ள பங்களா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்த அரசியல் பிரமுகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment