FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 24, 2016

மாற்றுத்திறனாளிகளை அதிமுக அரசு கொச்சைப்படுத்தி விட்டது தேசிய பார்வையற்றோர் இணையம் குற்றச்சாட்டு

24.03.2016, சென்னை: தேசிய பார்வையற்றோர் இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சியின் போது, கடந்த 2010ல் அரசு பணிகளில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாகன படி ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான அரசு இலவச பஸ்பாஸ் மட்டும் வழங்கி விட்டு ஆயிரம் ரூபாய் மாத வாகன படியை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியையும், இலவச பாசையும் ஒன்றிணைத்து பார்ப்பது வேதனையாகவும், தவறாகவும் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கம் போல் வாகன படியாக ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில முழுவதும் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாற்றுத்திறனாளிகள் எப்படியெல்லாம் போராடினார்கள். அவர்கள் பட்ட சித்ரவதை என்ன என்பது நாடறிந்த விஷயம்.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 சதவீதம் இடஒதுக்கீடு, வீட்டு வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேலும், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது இறந்து போன குப்புசாமிக்கு அடையாள அட்டையே கிடையாது என்று அரசிடம் கூறினோம். ஆனால், தமிழக அரசு நீதிமன்றத்திற்கு சென்று அவர் மாற்றுத்திறனாளியே கிடையாறு எனக்கூறி எங்களை கொச்சை படுத்தி விட்டது. இது போன்ற பல்வேறு இன்னல்களை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். வரவிருக்கும் ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும்.எங்களது 12 அம்ச கோரிக்கைகளை 10க்கும் மேற்பட்ட கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.சென்னை ஈசிஆரில் பஸ் மூலம் 6 பைகளில் நகை பரிமாற்றம் ஆந்திர அரசியல் பிரமுகர் தகவலால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டத்திலிருந்து சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் இப்போது பூதாகரமாக வெளிவந்துள்ளது. ஆந்திராவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அரசியல் பிரமுகர் ராகேஷ் ரெட்டி என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் எனது ஜேஆர் ஹேப்பி டிராவல்ஸ் பஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அந்த பஸ்சை ஓட்டிச் சென்ற எனது டிரைவரை மிட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலால் அவர்கள் சொன்னபடி டிரைவர் பஸ்சை மன்னார்குடி என்ற இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பஸ்சில் சுமார் தலா 70 கிலோ எடை கொண்ட 6 பைகளை ஏற்றியுள்ளனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறிய அந்த நபர்கள் பஸ்சை கிழக்கு கடற்கரை சாலைக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலைக்கு பஸ் வந்தவுடன் அந்த நபர்கள் டிரைவரை மீண்டும் மிரட்டி பஸ்சை நிறுத்தச் சொல்லியுள்ளனர். டிரைவர் பஸ்சை நிறுத்தவே அந்த பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் கீழே இறங்கியுள்ளனர்.

அந்த பைகளில் ஒரு பை கொஞ்சம் திறந்திருந்தது. அதில் தங்க நகைகள் ஏராளம் இருந்ததை எனது டிரைவர் பார்த்துள்ளார். நகைகள் அடங்கிய அந்த பைகளை இறக்கிய இடத்தில் உள்ள பங்களா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்த அரசியல் பிரமுகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment