FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, March 7, 2016

இந்திய எல்லைக்குள் வந்த காது கேளாத, வாய் பேச முடியாத பாக். சிறுமியை பாக். வீரர்களிடம் ஒப்படைத்த பி.எஸ்.எப்.


06.03.2016, சன்டிகர்: வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமி ஒருவர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் செக்டருக்குள் நுழைந்து எல்லை பாதுகாப்பு படையினரின் வேலிக்கு அருகில் வந்துவிட்டார். இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தபோது தான் அவருக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை அணுகி மதியம் 2 மணிக்கு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி கடாரியா கூறுகையில், பாகிஸ்தான் சிறுமி தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். அபோஹார் செக்டரில் உள்ள நாதா சிங் வாலா சோதனைச்சாவடி அருகே வந்த சிறுமி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றார்.

No comments:

Post a Comment