FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, March 7, 2016

இந்திய எல்லைக்குள் வந்த காது கேளாத, வாய் பேச முடியாத பாக். சிறுமியை பாக். வீரர்களிடம் ஒப்படைத்த பி.எஸ்.எப்.


06.03.2016, சன்டிகர்: வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமி ஒருவர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் செக்டருக்குள் நுழைந்து எல்லை பாதுகாப்பு படையினரின் வேலிக்கு அருகில் வந்துவிட்டார். இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தபோது தான் அவருக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை அணுகி மதியம் 2 மணிக்கு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி கடாரியா கூறுகையில், பாகிஸ்தான் சிறுமி தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். அபோஹார் செக்டரில் உள்ள நாதா சிங் வாலா சோதனைச்சாவடி அருகே வந்த சிறுமி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றார்.

No comments:

Post a Comment