FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, March 7, 2016

இந்திய எல்லைக்குள் வந்த காது கேளாத, வாய் பேச முடியாத பாக். சிறுமியை பாக். வீரர்களிடம் ஒப்படைத்த பி.எஸ்.எப்.


06.03.2016, சன்டிகர்: வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமி ஒருவர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் செக்டருக்குள் நுழைந்து எல்லை பாதுகாப்பு படையினரின் வேலிக்கு அருகில் வந்துவிட்டார். இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தபோது தான் அவருக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை அணுகி மதியம் 2 மணிக்கு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி கடாரியா கூறுகையில், பாகிஸ்தான் சிறுமி தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். அபோஹார் செக்டரில் உள்ள நாதா சிங் வாலா சோதனைச்சாவடி அருகே வந்த சிறுமி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றார்.

No comments:

Post a Comment