FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 24, 2016

காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

22.03.2016, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், சிவசைலம் காது கேளாதோர் பள்ளி மற்றும் அவ்வை ஆசிரமத்துக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர் நினைவாக திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் காந்தி கிராமம் காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளிக்கு ஐம்பது பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் முதித் ஜெயின், தலைவர் மால்தி முதித் ஜெயின் ஆகியோர் வழங்கினர். மேலும், அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மேகநாதன், செயல் உதவி தலைவர் (காஸ்டிக் சோடா பிரிவு) சுபாஷ் டாண்டன், மூத்த பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் வரதராஜன், தியாகமூர்த்தி, துணைப் பொதுமேலாளர்கள் யோகீஸ்வரன், கதிர்வேல், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல்,சிவசைலம் சாந்தி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டிசிடபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment