FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, March 24, 2016

காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

22.03.2016, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், சிவசைலம் காது கேளாதோர் பள்ளி மற்றும் அவ்வை ஆசிரமத்துக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர் நினைவாக திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் காந்தி கிராமம் காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளிக்கு ஐம்பது பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் முதித் ஜெயின், தலைவர் மால்தி முதித் ஜெயின் ஆகியோர் வழங்கினர். மேலும், அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மேகநாதன், செயல் உதவி தலைவர் (காஸ்டிக் சோடா பிரிவு) சுபாஷ் டாண்டன், மூத்த பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் வரதராஜன், தியாகமூர்த்தி, துணைப் பொதுமேலாளர்கள் யோகீஸ்வரன், கதிர்வேல், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல்,சிவசைலம் சாந்தி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டிசிடபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment