FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, March 24, 2016

காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

22.03.2016, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், சிவசைலம் காது கேளாதோர் பள்ளி மற்றும் அவ்வை ஆசிரமத்துக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர் நினைவாக திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் காந்தி கிராமம் காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளிக்கு ஐம்பது பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் முதித் ஜெயின், தலைவர் மால்தி முதித் ஜெயின் ஆகியோர் வழங்கினர். மேலும், அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மேகநாதன், செயல் உதவி தலைவர் (காஸ்டிக் சோடா பிரிவு) சுபாஷ் டாண்டன், மூத்த பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் வரதராஜன், தியாகமூர்த்தி, துணைப் பொதுமேலாளர்கள் யோகீஸ்வரன், கதிர்வேல், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல்,சிவசைலம் சாந்தி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டிசிடபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment