FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, March 25, 2016

உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

25.03.2016, தாம்பரம் : உதவித்தொகை கோரி, மாற்றுத்திறனாளி சாலையில் அமர்ந்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு தாம்பரம், ஆதி நகரை சேர்ந்தவர், நாகராஜ், 45. மாற்றுத்திறனாளியான அவர், மாற்றுத்திறனாளிகள் சங்க, மாநில துணை பொது செயலராக உள்ளார்.அவருக்கு, அரசு சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மாதத்திற்கான உதவித்தொகை கிடைக்க பெறாததால், நாகராஜ், தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தார். பணம் அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்த போது, உதவித்தொகை வரவில்லை என்றனர்.மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்ததில், பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அவரிடம் காண்பித்தனர்.

ஆனால் நேற்று தபால் அலுவலகம் சென்ற அவரிடம், பணம் வரவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், அவர் ஆத்திரமடைந்தார்.உடன் தபால் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் கேனுடன், தற்கொலை செய்து கொள்ள போவதாக சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமரசம் செய்து, பணத்தை பெற்று தந்ததை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

No comments:

Post a Comment