FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 25, 2016

உதவித்தொகை கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

25.03.2016, தாம்பரம் : உதவித்தொகை கோரி, மாற்றுத்திறனாளி சாலையில் அமர்ந்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு தாம்பரம், ஆதி நகரை சேர்ந்தவர், நாகராஜ், 45. மாற்றுத்திறனாளியான அவர், மாற்றுத்திறனாளிகள் சங்க, மாநில துணை பொது செயலராக உள்ளார்.அவருக்கு, அரசு சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மாதத்திற்கான உதவித்தொகை கிடைக்க பெறாததால், நாகராஜ், தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்தார். பணம் அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்த போது, உதவித்தொகை வரவில்லை என்றனர்.மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நாகராஜ் விசாரித்ததில், பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அவரிடம் காண்பித்தனர்.

ஆனால் நேற்று தபால் அலுவலகம் சென்ற அவரிடம், பணம் வரவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், அவர் ஆத்திரமடைந்தார்.உடன் தபால் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் கேனுடன், தற்கொலை செய்து கொள்ள போவதாக சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமரசம் செய்து, பணத்தை பெற்று தந்ததை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.

No comments:

Post a Comment