FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, March 17, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகளம்: சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை

சிவகாசி, 17 March 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காரைக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இப்பள்ளி மாணவர் ராக்கப்பன் முதலிடம் பெற்றார். மற்றொரு மாணவர் வேல்முருகன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி சந்திரிகா மூன்றாமிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி மாரிசெல்வி இரண்டாமிடமும், நீளம் தாண்டும் போட்டியில் மாணவி தனலட்சுமி மூன்றாமிடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி முத்தீஸ்வரி இரண்டாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் ரொக்கபரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள், பாராட்டினர்.

No comments:

Post a Comment