FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, March 17, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகளம்: சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை

சிவகாசி, 17 March 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காரைக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இப்பள்ளி மாணவர் ராக்கப்பன் முதலிடம் பெற்றார். மற்றொரு மாணவர் வேல்முருகன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி சந்திரிகா மூன்றாமிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி மாரிசெல்வி இரண்டாமிடமும், நீளம் தாண்டும் போட்டியில் மாணவி தனலட்சுமி மூன்றாமிடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி முத்தீஸ்வரி இரண்டாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் ரொக்கபரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள், பாராட்டினர்.

No comments:

Post a Comment