FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, March 17, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகளம்: சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை

சிவகாசி, 17 March 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காரைக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இப்பள்ளி மாணவர் ராக்கப்பன் முதலிடம் பெற்றார். மற்றொரு மாணவர் வேல்முருகன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி சந்திரிகா மூன்றாமிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி மாரிசெல்வி இரண்டாமிடமும், நீளம் தாண்டும் போட்டியில் மாணவி தனலட்சுமி மூன்றாமிடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி முத்தீஸ்வரி இரண்டாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் ரொக்கபரிசும் சான்றிதழும் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள், பாராட்டினர்.

No comments:

Post a Comment