FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, March 2, 2016

133 மாற்றுத் திறனாளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத சலுகை

02.03.2016, கடலுார்:கடலுார் மண்டலத்தில், 68 பார்வையற்றோர் உள்ளிட்ட 133 மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும் 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் கல்வி மண்டலத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், நரம்பு தளர்ச்சி, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 133 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 65, விழுப்புரத்தில் 35, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 33 பேர் உள்ளனர்.

மண்டலத்தில் பார்வையற்ற 68 பேர் மற்றும் நரம்பு தளர்ச்சி காரணமாக 7 பேருக்கும் இவர்கள் சொல்ல, சொல்ல தேர்வு எழுத 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டுள்ளனர்.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி ஆகியோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாகவும், அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் இருந்தும், பிழைகளில் இருந்தும் விலக்கு அளித்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment