FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, March 2, 2016

133 மாற்றுத் திறனாளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத சலுகை

02.03.2016, கடலுார்:கடலுார் மண்டலத்தில், 68 பார்வையற்றோர் உள்ளிட்ட 133 மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும் 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் கல்வி மண்டலத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், நரம்பு தளர்ச்சி, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 133 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 65, விழுப்புரத்தில் 35, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 33 பேர் உள்ளனர்.

மண்டலத்தில் பார்வையற்ற 68 பேர் மற்றும் நரம்பு தளர்ச்சி காரணமாக 7 பேருக்கும் இவர்கள் சொல்ல, சொல்ல தேர்வு எழுத 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டுள்ளனர்.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி ஆகியோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாகவும், அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் இருந்தும், பிழைகளில் இருந்தும் விலக்கு அளித்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment