FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, March 2, 2016

133 மாற்றுத் திறனாளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத சலுகை

02.03.2016, கடலுார்:கடலுார் மண்டலத்தில், 68 பார்வையற்றோர் உள்ளிட்ட 133 மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும் 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் கல்வி மண்டலத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், நரம்பு தளர்ச்சி, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 133 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 65, விழுப்புரத்தில் 35, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 33 பேர் உள்ளனர்.

மண்டலத்தில் பார்வையற்ற 68 பேர் மற்றும் நரம்பு தளர்ச்சி காரணமாக 7 பேருக்கும் இவர்கள் சொல்ல, சொல்ல தேர்வு எழுத 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டுள்ளனர்.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி ஆகியோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாகவும், அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் இருந்தும், பிழைகளில் இருந்தும் விலக்கு அளித்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment