FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, March 2, 2016

133 மாற்றுத் திறனாளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத சலுகை

02.03.2016, கடலுார்:கடலுார் மண்டலத்தில், 68 பார்வையற்றோர் உள்ளிட்ட 133 மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும் 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் கல்வி மண்டலத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், நரம்பு தளர்ச்சி, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 133 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 65, விழுப்புரத்தில் 35, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 33 பேர் உள்ளனர்.

மண்டலத்தில் பார்வையற்ற 68 பேர் மற்றும் நரம்பு தளர்ச்சி காரணமாக 7 பேருக்கும் இவர்கள் சொல்ல, சொல்ல தேர்வு எழுத 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டுள்ளனர்.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி ஆகியோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாகவும், அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் இருந்தும், பிழைகளில் இருந்தும் விலக்கு அளித்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment