FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, March 22, 2016

வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது: நாடாளுமன்றக் குழு

புது தில்லி, 21 March 2016
வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

எனவே அவர்களுக்கான விரிவான திட்டங்களை தயாரிக்குமாறு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (என்ஹெச்எஃப்டிசி) கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றக் குழு அண்மையில் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் என்ஹெச்எஃப்டிசி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

எனினும், ஆதரவற்ற நிலையில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதத்தில் மறுவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் சேராத அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான எவ்வித பயன்களையும் பெறாத இதுபோன்ற மக்களுக்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதோடு, ஆதரவற்றவர் என்ற நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment