FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, March 22, 2016

வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது: நாடாளுமன்றக் குழு

புது தில்லி, 21 March 2016
வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

எனவே அவர்களுக்கான விரிவான திட்டங்களை தயாரிக்குமாறு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (என்ஹெச்எஃப்டிசி) கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றக் குழு அண்மையில் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் என்ஹெச்எஃப்டிசி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

எனினும், ஆதரவற்ற நிலையில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதத்தில் மறுவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் சேராத அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான எவ்வித பயன்களையும் பெறாத இதுபோன்ற மக்களுக்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதோடு, ஆதரவற்றவர் என்ற நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment