FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, March 22, 2016

வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது: நாடாளுமன்றக் குழு

புது தில்லி, 21 March 2016
வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

எனவே அவர்களுக்கான விரிவான திட்டங்களை தயாரிக்குமாறு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (என்ஹெச்எஃப்டிசி) கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றக் குழு அண்மையில் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் என்ஹெச்எஃப்டிசி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

எனினும், ஆதரவற்ற நிலையில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதத்தில் மறுவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் சேராத அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான எவ்வித பயன்களையும் பெறாத இதுபோன்ற மக்களுக்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதோடு, ஆதரவற்றவர் என்ற நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment