FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, March 9, 2016

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு கிடைக்குமா?


09.03.2016
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்தல்களில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் விலக்கு அளித்து வந்துள்ளது. அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர், 3 கட்டங்களாக பயிற்சி வழங்கி தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, இதரப் பணிகள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வரும் வேளையில், அவர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டுமென, உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ‘மாற்றுத்திறனாளி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 1995-96-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் படி சமஉரிமை, சமவாய்ப்பு மற்றும் விதிவிலக்கு தளர்வு கோரும் உரிமை உள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1999-ல் இதற்கு அரசு ஆணை கூட பிறப்பித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட மாற்றுத் திறனாளிகள் விருப்பத்துக்கு விடப்பட்டன. ஆனால் இந்த தேர்தலுக்கு அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் விண்ணப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். கட்டாயத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துவிட்டால், அதன் பிறகு விலக்கு கேட்பது மிகவும் கடினம். எனவே உடனே இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளித்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் பணி ஒதுக் கீட்டில் உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்புள்ளவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையமே இம்முடிவை எடுக்க முடியும்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் ஆணையம் மூலம் இதற்கான முன் முயற்சியை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி கூறும்போது, ‘தேர்தல் பணிக்கான ஆசிரியர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் கொடுத்து விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இப் பணியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அறிவிப்பு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவ்வாறு அறிவிப்புகள் ஏதேனும் வந்தால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment