FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 24, 2016

மாற்றுத் திறனாளி குழந்தைகளை இணைத்து கல்வி வழங்கும் விழிப்புணர்வு வீதி நாடகம்

ஈரோடு, 24 March 2016
ஈரோட்டை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் உள்இணைத்து கல்வி வழங்கும் வகையிலான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை நாகர்கோவில் அக்கம் பக்கத்து சமூக பிணைப்பு, கோவை விடியல் அறக்கட்டளை, பெங்களுரூ சி.பி.எம். சாரோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.

மாற்றுத் திறன் குழந்தைகள் அனைவரும் அவரவர் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசுப் பொதுப் பள்ளிகளில் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி முறைகளை அமல்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளில் உள்ளது போலவே அரசுப் பொதுப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான அனைத்து கல்வி உபகரணங்களும், சாதனங்களும் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும். பொது அறிவை வளர்ப்பதற்கும் திறமைகளை வளர்ப்பதற்கும் கவிதை, கட்டுரை, ஓவியம் பேச்சுத் திறன் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான தூய்மையான, பாதுகாப்பான அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் போன்ற கருத்துகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை புவனா தலைமை வகித்தார். கஸ்பா பேட்டை பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளி சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment