FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, March 24, 2016

மாற்றுத் திறனாளி குழந்தைகளை இணைத்து கல்வி வழங்கும் விழிப்புணர்வு வீதி நாடகம்

ஈரோடு, 24 March 2016
ஈரோட்டை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் உள்இணைத்து கல்வி வழங்கும் வகையிலான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை நாகர்கோவில் அக்கம் பக்கத்து சமூக பிணைப்பு, கோவை விடியல் அறக்கட்டளை, பெங்களுரூ சி.பி.எம். சாரோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.

மாற்றுத் திறன் குழந்தைகள் அனைவரும் அவரவர் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசுப் பொதுப் பள்ளிகளில் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி முறைகளை அமல்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளில் உள்ளது போலவே அரசுப் பொதுப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான அனைத்து கல்வி உபகரணங்களும், சாதனங்களும் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும். பொது அறிவை வளர்ப்பதற்கும் திறமைகளை வளர்ப்பதற்கும் கவிதை, கட்டுரை, ஓவியம் பேச்சுத் திறன் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான தூய்மையான, பாதுகாப்பான அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் போன்ற கருத்துகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை புவனா தலைமை வகித்தார். கஸ்பா பேட்டை பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளி சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment