FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, March 24, 2016

மாற்றுத் திறனாளி குழந்தைகளை இணைத்து கல்வி வழங்கும் விழிப்புணர்வு வீதி நாடகம்

ஈரோடு, 24 March 2016
ஈரோட்டை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் உள்இணைத்து கல்வி வழங்கும் வகையிலான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை நாகர்கோவில் அக்கம் பக்கத்து சமூக பிணைப்பு, கோவை விடியல் அறக்கட்டளை, பெங்களுரூ சி.பி.எம். சாரோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.

மாற்றுத் திறன் குழந்தைகள் அனைவரும் அவரவர் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசுப் பொதுப் பள்ளிகளில் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி முறைகளை அமல்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளில் உள்ளது போலவே அரசுப் பொதுப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான அனைத்து கல்வி உபகரணங்களும், சாதனங்களும் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும். பொது அறிவை வளர்ப்பதற்கும் திறமைகளை வளர்ப்பதற்கும் கவிதை, கட்டுரை, ஓவியம் பேச்சுத் திறன் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான தூய்மையான, பாதுகாப்பான அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் போன்ற கருத்துகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை புவனா தலைமை வகித்தார். கஸ்பா பேட்டை பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளி சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment