FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, March 7, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத் தரங்கில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிஷன் பால் குர்ஜார் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு வரையறுத்து வருகிறது. இதில் 12 வகையான உடல் குறைபாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டைகள் வேறு மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 50 நகரங்களில் 100 அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.218 கோடி செலவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத 15 ஆயிரம் குழந்தை களுக்காக ரூ.900 கோடியில் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1800 முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment