FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, March 7, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத் தரங்கில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிஷன் பால் குர்ஜார் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு வரையறுத்து வருகிறது. இதில் 12 வகையான உடல் குறைபாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டைகள் வேறு மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 50 நகரங்களில் 100 அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.218 கோடி செலவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத 15 ஆயிரம் குழந்தை களுக்காக ரூ.900 கோடியில் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1800 முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment