FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, March 7, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத் தரங்கில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிஷன் பால் குர்ஜார் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு வரையறுத்து வருகிறது. இதில் 12 வகையான உடல் குறைபாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டைகள் வேறு மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 50 நகரங்களில் 100 அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.218 கோடி செலவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத 15 ஆயிரம் குழந்தை களுக்காக ரூ.900 கோடியில் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1800 முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment