FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, March 7, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத் தரங்கில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிஷன் பால் குர்ஜார் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு வரையறுத்து வருகிறது. இதில் 12 வகையான உடல் குறைபாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டைகள் வேறு மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 50 நகரங்களில் 100 அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.218 கோடி செலவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத 15 ஆயிரம் குழந்தை களுக்காக ரூ.900 கோடியில் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1800 முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment