FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, March 13, 2016

ஈரோட்டில் உள்ள போக்குவரத்துதுறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

12.03.2016, ஈரோடு
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கு 25–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், பஸ் பயண சலுகை அட்டை பெரிதாக இருப்பதாக கூறி பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி இம்தியாஸ் அகமது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘எங்களுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகை அட்டை மிகவும் பெரிதாக உள்ளது. இதை சட்டைப்பையில் வைத்து எடுத்துச்செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவதுபோல ஈரோடு மாவட்டத்திலும் அட்டைக்கு பதிலாக, இலவச பஸ் பயண சலுகை புத்தகம் வழங்கவேண்டும்’ என்றார்கள்.

அதற்கு அவர், ‘அடுத்த மாதம் முதல் பஸ் பயண சலுகை, புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


No comments:

Post a Comment