FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, March 22, 2016

பெரியார் பல்கலையில் காலமுறை ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து மெத்தனம் மாற்றுத்திறனாளிகள் அவதி

21.03.2016, சேலம், : மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உயர்கல்விக்காக, கடந்த 1997ம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தற்போது பல்கலைக்கழகத்தின் கீழ், 95 அரசு, தனியார் மற்றும் உறுப்பு கலை அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. 

மேலும், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளுக்கென பல்கலைக்கழகத்திலேயே, 25க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர்கள், இளைநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 282 தொகுப்பூதிய பணியாளர்களும், 121 தினக்கூலி பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களில் 15 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

அரசு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தொகுப்பூதிய மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த 2008ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார். மேலும், இந்த அரசாணையை அமல்படுத்தும் போது, மாற்றுத்திறாளிகள் சார்பாக ஏதேனும் விதிகள் தளர்வு செய்ய வேண்டின், அந்தந்த தலைமை செயலக நிர்வாக துறைகளின் ஒப்புதல் பெற்று, பணியை வரன்முறைபடுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள், கடந்த 2010ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனையடுத்து, 2 வருடங்களுக்கு மேலாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள், அரசாணைப்படி தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என 2012ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை அந்த அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தொகுப்பூதிய பணியாளர்கள் சிலர் கூறியதாவது:காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக 2008ம் ஆண்டு ெவளியிடப்பட்ட அரசாணை, தங்களுக்கு பொருந்தாது என கூறி, பல்கலைக்கழக பதிவாளர் காலமுறை ஊதியம் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதனிடையே உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அந்த அரசாணை பொருந்தும் என கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்ைல. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, அவருக்கு ஒரு நிரந்தர பணியிடம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவும் இன்று வரை என்ன ஆனது என தெரியவில்லை.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டலின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்யப்படாத நிலையில், புதிய நியமனம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்குவோம் எனக்கூறி, புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசாணை பெற்று, ஒரு வருடமாக அதை அமல்படுத்தாத பல்கலைக்கழகம், தற்போது வெறும் கண்துடைப்பிற்காக திடீெரன கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி மூலம் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காலமுறை ஊதியம் கோரி, மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்திற்கு செல்லவதை தடுக்கவே இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து ெதாகுப்பூதிய பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னரே, மீதமுள்ள இடங்களுக்கு புதிய நியமனங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு தொகுப்பூதிய பணியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment