FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, March 22, 2016

பெரியார் பல்கலையில் காலமுறை ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து மெத்தனம் மாற்றுத்திறனாளிகள் அவதி

21.03.2016, சேலம், : மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உயர்கல்விக்காக, கடந்த 1997ம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தற்போது பல்கலைக்கழகத்தின் கீழ், 95 அரசு, தனியார் மற்றும் உறுப்பு கலை அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. 

மேலும், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளுக்கென பல்கலைக்கழகத்திலேயே, 25க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர்கள், இளைநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 282 தொகுப்பூதிய பணியாளர்களும், 121 தினக்கூலி பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களில் 15 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

அரசு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தொகுப்பூதிய மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த 2008ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார். மேலும், இந்த அரசாணையை அமல்படுத்தும் போது, மாற்றுத்திறாளிகள் சார்பாக ஏதேனும் விதிகள் தளர்வு செய்ய வேண்டின், அந்தந்த தலைமை செயலக நிர்வாக துறைகளின் ஒப்புதல் பெற்று, பணியை வரன்முறைபடுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள், கடந்த 2010ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனையடுத்து, 2 வருடங்களுக்கு மேலாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள், அரசாணைப்படி தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என 2012ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை அந்த அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தொகுப்பூதிய பணியாளர்கள் சிலர் கூறியதாவது:காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக 2008ம் ஆண்டு ெவளியிடப்பட்ட அரசாணை, தங்களுக்கு பொருந்தாது என கூறி, பல்கலைக்கழக பதிவாளர் காலமுறை ஊதியம் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதனிடையே உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அந்த அரசாணை பொருந்தும் என கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்ைல. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, அவருக்கு ஒரு நிரந்தர பணியிடம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவும் இன்று வரை என்ன ஆனது என தெரியவில்லை.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டலின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்யப்படாத நிலையில், புதிய நியமனம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்குவோம் எனக்கூறி, புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசாணை பெற்று, ஒரு வருடமாக அதை அமல்படுத்தாத பல்கலைக்கழகம், தற்போது வெறும் கண்துடைப்பிற்காக திடீெரன கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி மூலம் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காலமுறை ஊதியம் கோரி, மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்திற்கு செல்லவதை தடுக்கவே இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து ெதாகுப்பூதிய பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னரே, மீதமுள்ள இடங்களுக்கு புதிய நியமனங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு தொகுப்பூதிய பணியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment