FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, March 2, 2016

திருப்பூர் காது கேளாதோர் பள்ளி தேசிய செஸ் போட்டிக்கு தேர்வு

02.03.2016, மாநில அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, தேசியப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மத்தியபிரதேச மாநிலத்தில், 18-வது தேசிய அளவிலான காது கேளாதோருக்கான சதுரங்கப்போட்டி நாளை முதல் முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அணி சார்பில் திருப்பூர், சென்னை, கன்னியாகுமரியை சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவியர் நந்தினி, அம்சவேணி, சந்தியா மற்றும் மாணவன் சாந்தனு ஆகிய 4 பேர் அபாரமாக விளையாடி தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். தேசிய போட்டியில் வெற்றி பெறுவோர், உலக அளவில் நடக்கும் காது கேளாதோருக்கான செஸ் போட்டியில் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment