FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, March 11, 2016

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர்

காரைக்குடி, 11 March 2016
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து கணிதம் மற்றும் அறிவியல் பிரைல் குறியீடுகள் குறித்த 2 வாரப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: சாதாரண மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு சேவையாற்றுபவர்களாவர். இந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

விழாவில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ராஜகுரு தொடக்க உரையாற்றினார். கல்வியியல் புல முதன்மையர் பி. சிவகுமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறைத் தலைவர் ஜெ.சுஜாதாமாலினி வரவேற்றார். பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment