FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 11, 2016

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர்

காரைக்குடி, 11 March 2016
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து கணிதம் மற்றும் அறிவியல் பிரைல் குறியீடுகள் குறித்த 2 வாரப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: சாதாரண மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு சேவையாற்றுபவர்களாவர். இந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

விழாவில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ராஜகுரு தொடக்க உரையாற்றினார். கல்வியியல் புல முதன்மையர் பி. சிவகுமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறைத் தலைவர் ஜெ.சுஜாதாமாலினி வரவேற்றார். பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment