FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, March 11, 2016

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர்

காரைக்குடி, 11 March 2016
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து கணிதம் மற்றும் அறிவியல் பிரைல் குறியீடுகள் குறித்த 2 வாரப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: சாதாரண மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு சேவையாற்றுபவர்களாவர். இந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

விழாவில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ராஜகுரு தொடக்க உரையாற்றினார். கல்வியியல் புல முதன்மையர் பி. சிவகுமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறைத் தலைவர் ஜெ.சுஜாதாமாலினி வரவேற்றார். பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment