FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, March 11, 2016

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும்: துணைவேந்தர்

காரைக்குடி, 11 March 2016
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளி குழந் தைகளுக்குப் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா வியாழக்கிழமை கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து கணிதம் மற்றும் அறிவியல் பிரைல் குறியீடுகள் குறித்த 2 வாரப் பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: சாதாரண மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு சேவையாற்றுபவர்களாவர். இந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

விழாவில், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ராஜகுரு தொடக்க உரையாற்றினார். கல்வியியல் புல முதன்மையர் பி. சிவகுமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக சிறப்புக் கல்வியியல் மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறைத் தலைவர் ஜெ.சுஜாதாமாலினி வரவேற்றார். பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment