FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 17, 2016

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூவருக்கு 8 ஆண்டு சிறை

திருநெல்வேலி, 17.03.2016, 
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தலா 8 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த, வாய் பேச இயலாத, காது கேளாத 38 வயதுப் பெண், கணவரை இழந்தவர். தன் தந்தையுடன் வசித்து வரும் இவர், ஆடு மேய்த்து வந்தார்.

கடந்த 18.11.2013இல் வழக்கம்போல் அப்பெண் தனது உறவுக்கார சிறுமியுடன் அங்குள்ள தோமஸ்புரம் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு வந்த டேவிஸ்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணமுத்து (26), முனியசாமி மகன் செல்வம் (38), சௌந்திரபாண்டியன் மகன் லட்சுமணகுமார் (25) ஆகிய மூவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். பின்னர், அப்பெண்ணை காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.

உடன் சென்ற சிறுமி, தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீஸார், அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சரவணமுத்து, செல்வம், லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி ஏ.அப்துல்காதர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார். மற்றொரு பிரிவின் கீழ், மூவருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகை ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சிறைத் தண்டனையை மூவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment