FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, March 17, 2016

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூவருக்கு 8 ஆண்டு சிறை

திருநெல்வேலி, 17.03.2016, 
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தலா 8 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த, வாய் பேச இயலாத, காது கேளாத 38 வயதுப் பெண், கணவரை இழந்தவர். தன் தந்தையுடன் வசித்து வரும் இவர், ஆடு மேய்த்து வந்தார்.

கடந்த 18.11.2013இல் வழக்கம்போல் அப்பெண் தனது உறவுக்கார சிறுமியுடன் அங்குள்ள தோமஸ்புரம் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு வந்த டேவிஸ்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணமுத்து (26), முனியசாமி மகன் செல்வம் (38), சௌந்திரபாண்டியன் மகன் லட்சுமணகுமார் (25) ஆகிய மூவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். பின்னர், அப்பெண்ணை காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.

உடன் சென்ற சிறுமி, தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீஸார், அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சரவணமுத்து, செல்வம், லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி ஏ.அப்துல்காதர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார். மற்றொரு பிரிவின் கீழ், மூவருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகை ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சிறைத் தண்டனையை மூவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment