FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, March 29, 2016

ராணுவ தொழிற்சாலையில் பணிகள்

இந்திய ராணுவத்திற்குத் தேவையான உணவு, உடை, மருந்து, ஆயுதங்கள், டாங்கிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில், குரூப்–பி, குரூப்–சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

தீயணைப்பு வீரர், சமையலர், டெலிபோன் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், கிரைண்டர், டர்னர், வெல்டர், எக்சாமினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 143 பேர், தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 93 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 பணியிடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 3 பணியிடங்களும் உள்ளன.

30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.

டீச்சர் (பிரைமரி) பணிக்கு 12–ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலமென்ட்ரி எஜுசேன் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10–ம் வகுப்பு தேர்ச்சியும், பணி சார்ந்த அனுபவம், சான்றிதழ் பெற்றவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 19–25 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழிலோ அல்லது www.ofb.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்க்கலாம்.
Click here - Notification 
Click here - Apply online


No comments:

Post a Comment