FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, March 29, 2016

ராணுவ தொழிற்சாலையில் பணிகள்

இந்திய ராணுவத்திற்குத் தேவையான உணவு, உடை, மருந்து, ஆயுதங்கள், டாங்கிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில், குரூப்–பி, குரூப்–சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

தீயணைப்பு வீரர், சமையலர், டெலிபோன் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், கிரைண்டர், டர்னர், வெல்டர், எக்சாமினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 143 பேர், தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 93 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 பணியிடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 3 பணியிடங்களும் உள்ளன.

30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.

டீச்சர் (பிரைமரி) பணிக்கு 12–ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலமென்ட்ரி எஜுசேன் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10–ம் வகுப்பு தேர்ச்சியும், பணி சார்ந்த அனுபவம், சான்றிதழ் பெற்றவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 19–25 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழிலோ அல்லது www.ofb.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்க்கலாம்.
Click here - Notification 
Click here - Apply online


No comments:

Post a Comment