FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, March 25, 2016

அரசு ஊழியர் வாகனப்படி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

24.03.2016, 'அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியை நிறுத்தக் கூடாது' என, மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், 30 ஆயிரம் பேருக்கு, 2010 முதல், மாதந்தோறும் வாகனப்படி, 1,000 ரூபாய் தரப்படுகிறது. இது, வீட்டில் இருந்து, பஸ் நிறுத்தத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் ஆட்டோவில் செல்ல வழங்கப்படுகிறது.இதை மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனர் மற்றும் செயலர் தவறாக புரிந்து கொண்டு, 'இலவச பஸ் பாஸ் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வாகனப்படி வழங்கக்கூடாது' என, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்துறை அதிகாரிகளின் செயலை, தேசிய பார்வையற்றோர் இணையம், வன்மையாக கண்டிக்கிறது;வாகனப்படியை நிறுத்தக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment