FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 25, 2016

அரசு ஊழியர் வாகனப்படி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

24.03.2016, 'அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியை நிறுத்தக் கூடாது' என, மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், 30 ஆயிரம் பேருக்கு, 2010 முதல், மாதந்தோறும் வாகனப்படி, 1,000 ரூபாய் தரப்படுகிறது. இது, வீட்டில் இருந்து, பஸ் நிறுத்தத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் ஆட்டோவில் செல்ல வழங்கப்படுகிறது.இதை மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனர் மற்றும் செயலர் தவறாக புரிந்து கொண்டு, 'இலவச பஸ் பாஸ் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வாகனப்படி வழங்கக்கூடாது' என, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்துறை அதிகாரிகளின் செயலை, தேசிய பார்வையற்றோர் இணையம், வன்மையாக கண்டிக்கிறது;வாகனப்படியை நிறுத்தக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment