FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, March 25, 2016

அரசு ஊழியர் வாகனப்படி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

24.03.2016, 'அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியை நிறுத்தக் கூடாது' என, மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், 30 ஆயிரம் பேருக்கு, 2010 முதல், மாதந்தோறும் வாகனப்படி, 1,000 ரூபாய் தரப்படுகிறது. இது, வீட்டில் இருந்து, பஸ் நிறுத்தத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் ஆட்டோவில் செல்ல வழங்கப்படுகிறது.இதை மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனர் மற்றும் செயலர் தவறாக புரிந்து கொண்டு, 'இலவச பஸ் பாஸ் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வாகனப்படி வழங்கக்கூடாது' என, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்துறை அதிகாரிகளின் செயலை, தேசிய பார்வையற்றோர் இணையம், வன்மையாக கண்டிக்கிறது;வாகனப்படியை நிறுத்தக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment