FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, March 29, 2016

பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டம்

29.03.2016, பொலிவியா,
பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்தகோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுதிறனாளிகள் வினோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள கோஜாம்பாம்பா நகரத்தில் இருந்து லாபாஸ் வரையிலான மலைப்பகுதியை சக்கர நாற்காலி மற்றும் ஊன்று கோல் கொண்டு மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்று திறனாளிக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்த முடியாது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், தங்களது உதவித்தொகையை உயர்த்த கோரி, மாற்றுதிறனாளிகள் தங்களை வறுத்தி கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment