FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, June 11, 2016

சுயதொழில் தொடங்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

11.06.2016, விருதுநகர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வியாபாரம், சேவை தொழில், உற்பத்தி தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 1 லட்சம் கரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டம். மேலும், திட்ட மதிப்பீடு உற்பத்தி நிறுவனமாயின் ரூ.5 லட்சத்திற்கும், சேவை நிறுவனமாயின் ரூ.3 லட்சத்திற்கும், வியாபார நிறுவனமாயின் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment