FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, June 11, 2016

சுயதொழில் தொடங்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

11.06.2016, விருதுநகர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வியாபாரம், சேவை தொழில், உற்பத்தி தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 1 லட்சம் கரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டம். மேலும், திட்ட மதிப்பீடு உற்பத்தி நிறுவனமாயின் ரூ.5 லட்சத்திற்கும், சேவை நிறுவனமாயின் ரூ.3 லட்சத்திற்கும், வியாபார நிறுவனமாயின் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment