FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, June 11, 2016

சுயதொழில் தொடங்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

11.06.2016, விருதுநகர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வியாபாரம், சேவை தொழில், உற்பத்தி தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 1 லட்சம் கரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டம். மேலும், திட்ட மதிப்பீடு உற்பத்தி நிறுவனமாயின் ரூ.5 லட்சத்திற்கும், சேவை நிறுவனமாயின் ரூ.3 லட்சத்திற்கும், வியாபார நிறுவனமாயின் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment