FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 11, 2016

சுயதொழில் தொடங்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

11.06.2016, விருதுநகர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வியாபாரம், சேவை தொழில், உற்பத்தி தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 1 லட்சம் கரை கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டம். மேலும், திட்ட மதிப்பீடு உற்பத்தி நிறுவனமாயின் ரூ.5 லட்சத்திற்கும், சேவை நிறுவனமாயின் ரூ.3 லட்சத்திற்கும், வியாபார நிறுவனமாயின் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment