FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, June 28, 2016

ஹெலன் கெல்லரின் 10 எழுச்சியூட்டும் மேற்கோள்கள்

27.06.2016
பார்வைத்திறன், பேசும் திறன், கேட்கும் திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் (Helen Keller) பிறந்த தினம் இன்று (ஜூன் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

  1. அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கம்பியா நகரில் (1880) பிறந்தார். ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் பறிபோனது. தான் நினைப்பதை மற்றவர்களுக்கு உணர்த்த தெரியாமல் தவித்த குழந்தை, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.
  2. எப்படியாவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்று பெற்றோர் படாத பாடுபட்டனர். ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ என்று உலகம் போற்றிய ஆசிரியை ஆனி சலிவன் 1887-ல் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரியை மாணவி உறவு அடுத்த 49 ஆண்டுகாலம் நீடித்தது.
  3. முதலில் பொருட்களை இவரது கைகளில் கொடுத்தும், மரம், செடி கொடிகளைத் தொடச் செய்தும் அவற்றின் பெயர்களை கையில் எழுதியும் காட்டினார் சலிவன். எதையும் வேகமாக கற்கும் ஆற்றல் பெற்றிருந்த ஹெலன், விரைவில் பிரெய்லி முறையைக் கற்றார். உதடுகளில் கைவைத்து அதன் அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கற்றார்.
  4. பத்து வயது நிறைவதற்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதினார். பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் வாயிலாகவும் பிரெய்லி முறையிலும் பல நூல்களைப் படித்தார்.
  5. சத்தம்போட்டு அழுது, சிரிக்கிற ஹெலனால் பேசவும் முடியும் என்பதை 13-வது வயதில் தோழிகள் புரிய வைத்தனர். சாராஃபுல்லர் என்ற ஆசிரியரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார். நியூயார்க்கில் உள்ள காது கேளாதோர் ரைட் ஹுமாஸன் பள்ளியில் பயின்றார். தெளிவாகப் பேச முடியா விட்டாலும், பிறர் புரிந்துகொள்ளும் அளவுக்கு பேசும் திறனை வசப்படுத்திக்கொண்டார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
  6. சுயசரிதையை 23 வயதில் எழுதினார். இது பெண்கள் இதழில் தொடராக வந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இதுதவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார்.
  7. ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 24-வது வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
  8. பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பை உருவாக்கினார். வாழ் நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்டார். அவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க வைப்பதற்காக, இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கி னார்.
  9. இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ திரைப்படத்தில் ஹெலன், ஆனி சலிவனாக நடித்த 2 நடிகைகளும் ஆஸ்கர் விருதை வென்றனர். இவரது சுயசரிதை, நாடகமாகத் தயாரிக்கப்பட்டது.
  10. உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை உழைத்த ஹெலன் கெல்லர் 88-வது வயதில் (1968) மறைந்தார்.

No comments:

Post a Comment